காஞ்சி சங்கரமடத்துக்கு கீழே ராவணன் பிறந்த இடம்- இடித்துவிட்டு ஆய்வு செய்க-திருமுருகன் காந்தி 'பகீர்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு கீழே ராவணன் பிறந்த இடம் இருக்கிறது; ஆகையால் காஞ்சிபுரம் சங்கர மடத்தை இடித்துவிட்டு அகழாய்வு நடத்த வேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நாளில் சென்னையில் தமிழ்த் தேசிய கூட்டணி சார்பாக "தமிழர் மூதாதை! தமிழ் நிலத்து அரசன் இராவணன் திருவிழா" நடைபெற்றது.

Tamil National Alliance claims Ravana birth place under Kanchi Sankara Mutt

"திராவிடப் பழங்குடியினரே இந்தியா முழுமைக்கும் விரவி இருந்தார்கள் என்பதற்கும், இராவணன் திராவிடப் பழங்குடி இனத்தைச் சார்ந்தவனே என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. தமிழின் வேர்ச்சொல் அகராதியின்படியும் இராவணன் என்னும் பெயரே அதற்கு எடுத்துக்காட்டு. தமிழ் சொற்களில் 'ர' எனும் ரகரம் முதன்மையாக வராது. அதற்கு முன்பு அ அல்லது இ என்ற எழுத்துகள் வரும். அரவணன் என்பதே சரியானது. அரவணன் என்பதன் வேர்ச்சொல்லின்படி, அரவம் என்றால் பாம்பு என்பது பொருள். அரவணன் என்பதற்கு நாகர்களின் தலைவன் என்று பொருள். அம்பேத்கர் அவர்களின் ஆய்வும் நாகர்களான தமிழர்களே இந்தியம் முழுமையும் இருந்தவர்கள் என்று சொல்கிறது. இவற்றை இணைத்துப் பார்க்கும் போது திராவிடப் பழங்குடிகளான நாகர்களே இம்மண்ணுக்குரியவர்கள் என்பதே தெளிவாகிறது" என்ற அடிப்படையில் இராவணன் திருவிழா நடத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டணி தெரிவித்திருந்தது.

Tamil National Alliance claims Ravana birth place under Kanchi Sankara Mutt

இந்த நிகழ்ச்சிக்கு ராம பக்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் போலீசார் தலையிட்டு அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் திருமுருகன் காந்தி கூறியதாவது: ராவணன் தென்னாட்டைச் சேர்ந்தவன். தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். ராமாயணம் உண்மை; ராமன் உண்மை எனில் ராவணன் தென்னாட்டைச் சேர்ந்தவன். அவன் சிவபக்தன். அவன் பிறந்தது தமிழ்நாடு என்று சொல்கிறார்கள். ராவணன் பிறந்தது அன்றைக்கு இருந்த மிக பழமையான காஞ்சிபுரம் நகரம்தான் என்கிறோம். காஞ்சிபுரத்தில் சங்கரமடத்துக்கு கீழேதான் ராவணன் பிறந்த பூமி இருக்கிறது. அந்த இடத்தில் தமிழ்நாட்டின் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தினால் ராவணனின் பூர்வீகத்தை கண்டுபிடிக்கலாம். ஆகையால் தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு கீழே அகழ்வராய்ச்சி செய்து ராவணன் பிறந்த இடத்தை கண்டறிய வேண்டும். இவ்வாறு திருமுருகன் காந்தி கூறினார்.

Tamil National Alliance claims Ravana birth place under Kanchi Sankara Mutt
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+