உலகின் பழமையான மொழி தமிழ் தான்.. சமஸ்கிருதம் அல்ல.. பாடலாசிரியர் ஜாவேத் அக்தரின் தரமான பதில்!
மும்பை: உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்று ஜெய்ப்பூரில் நடந்த இலக்கிய திருவிழாவில் இந்தி சினிமாவின் பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார். உருது மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் எந்த மொழி பழமையானது என்று ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு தமிழுக்கு பின்னரே சமஸ்கிருதம் என்றும் ஜாவேத் அக்தர் பதிலளித்துள்ளார்.
அண்மையில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படம் இந்தி திணிப்பு விவாதத்தை தொடங்கி வைத்தது. 1960களில் நடந்த மொழிப் போர் விவகாரத்தை மையமாக வைத்து பராசக்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தமிழின் பெருமைகள், உலகின் பழமையான மொழி தமிழ் என்று பலரும் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.

அதேபோல் இந்தி திணிப்பால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாகவும் விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் இலக்கிய திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உருது மொழி கவிஞரும், இந்தி சினிமாவின் பிரபல பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் சிறந்த விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது ஜாவேத் அக்தரிடம், உருது அல்லது சமஸ்கிருதம்.. இதில் எது மிகவும் பழமையான மொழி? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஜாவேத் அக்தர், என்னிடம் என்ன மாதிரியான கேள்வியை கேட்கிறீர்கள்.. உருது மொழி என்பது சமஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்தது தான். உலகில் பேசப்பட்டு வரும் 2வது பழமையான மொழி சமஸ்கிருதம் தான். ஆனால் உலகில் பேசப்பட்டு வரும் மிகவும் பழமையான மொழி என்றால், அது தமிழ் தான் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, உண்மையில் நீங்கள் உருது அல்லது சமஸ்கிருதம் என்று ஒப்பிட்டு கேட்பதற்கு பதிலாக, லேட்டின் மற்றும் க்ரீக் மொழிகளை கேட்டிருக்க வேண்டும். அதேபோல் உருது மொழி உருவாக்கி இன்னும் ஆயிரம் ஆண்டுகளை கூட கடக்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஜாவேத் அக்தரின் பேச்சு சோசியல் மீடியாவில் அதிகளவில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
உருது கவிஞரும், இந்தி சினிமாவின் பிரபல பாடலாசிரியருமான ஜாவேத் அக்தரின் தமிழ் மொழி தொடர்பான கருத்திற்கும் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது. பாடலாசிரியராக நீண்ட அனுபவம் கொண்ட ஜாவேத் அக்தர் 5 முறை தேசிய விருதை வென்றுள்ளார். 81 வயதாகும் ஜாவேத் அக்தர், இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளிலும் பாடல்களை எழுதியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications