"நேரடியாக நீதிமன்றத்திற்கு வரேன்.! திமுகவுக்கு நன்றி.." பாஜக தலைவர் அண்ணாமலை பரபர! என்ன மேட்டர்
சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளைய தினம் திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர். பாலு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியலில் இப்போது எதிர்க்கட்சியாக மிகவும் ஆக்டிவாக பாஜக செயல்பட்டு வருகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாகத் தமிழ்நாடு அரசையும் பாஜகவையும் விமர்சித்தே வருகிறார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை திமுகவினர் சொத்து பட்டியல் என்று கூறி ஒன்றை வெளியிட்டார். அதில் திமுகவின் முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

அண்ணாமலை: அப்போதே அவர் இது திமுகவினரின் சொத்து பட்டியல் என்றும் ஊழல் பட்டியல் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், இதுவரை தமிழ்நாட்டை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். இது அதிமுக- பாஜக கூட்டணி இடையே ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் மறுபுறம் இது திமுகவினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரூ.500 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து திமுகவில் இருந்து மேலும் சிலரும் நோட்டீஸ் அனுப்பினர். அந்த வகையில் திமுக மக்களவை குழு தலைவரான டி.ஆர்.பாலுவும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
பரபர ட்வீட்: இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், அண்ணாமலை இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். திமுகவினர் சொத்துக் குவிப்பு குறித்த உண்மைகளும் நீதிமன்றம் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தனது ட்விட்டரில், "திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு சொத்துக் குவிப்பு பற்றிய தகவல்களை, தமிழ்நாடு பாஜக சார்பாக திமுக பைல்ஸ்-இல் வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர் என் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நாளை (14/07/2023) நேரில் ஆஜராக உள்ளேன்.
ஊழல் கரையான்: ஊழல் எனும் கரையான், இத்தனை ஆண்டுக் காலம் நமது நாட்டை எப்படி அரித்திருக்கிறது என்றும், அதனை அரசியலிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டியது எத்தனை முக்கியம் என்பதையும் பொதுமக்கள் அனைவரும் அறிவார்கள்.
நமது மாண்புமிகு நீதித் துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவினர் சொத்துக் குவிப்பு பற்றிய அனைத்து உண்மைகளும் மாண்புமிகு நீதிமன்றம் வாயிலாக மக்களுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த திமுகவுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
-
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?












Click it and Unblock the Notifications