டெங்கு காய்ச்சல் பாதிப்பு: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
பொதுவாக மழைக்காலங்களில் பல்வேறு காய்ச்சல்கள் பரவுவது வழக்கம். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவன் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பெய்ததால் டெங்கு காய்ச்சலும் பரவ தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும் வரும் 16-ந் தேதி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் உள்ளிட்டோருடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவும் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications