ஸ்டாலின் தந்த ரியாக்சன்.. சட்டென எழுந்த எடப்பாடி.. ஆளுநர் ரவி கிளம்புறப்ப இதை நோட் பண்ணீங்களா?
சென்னை: இன்று சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர். என் ரவி பாதியில் வெளியேறிய போது முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்சனும்.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்சனும் பெரிய அளவில் கவனம் பெற்றது.
இன்று தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவி தனது உரையை பாதியில் நிறுத்தினாலும்.. அவர் சட்டசபையை விட்டு வெளியேறாமல் அமர்ந்து இருந்தார். கடைசி வரையில் அமர்ந்து இருந்தும் எப்போது சபாநாயகர் ஆளுநர் ரவிக்கு நேரடியாக பதிலடி கொடுக்க தொடங்கினாரோ அந்த நொடி.. தேசிய கீதம் வாசிக்கும் முன் ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறினார்.
ஆளுநர் ரவி பேச்சு: எதிர்பார்த்தபடியே இன்று தமிழ்நாடு சட்டசபை பரபரப்புடன் கூடியது. ஆளுநர் ரவி உரையில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு நிலவி வந்தது. அதன்படியே இந்த மாதம் நடக்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று சட்டசபை ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையில் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன்பின் பட்ஜெட் கூட்ட தொடரின் அறிமுகத்தை வாசித்தார். அதன்பின் உரையை பாதியில் நிறைவு செய்தார். 2 நிமிடங்கள் மட்டுமே மொத்தமாக பட்ஜெட் கூட்டத்தில் ஆர். என் ரவி உரை நிகழ்த்தினார்.
என்ன சொன்னார்?: சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு வைத்தார். சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.

அதாவது சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.
வெளியேறினார்: இன்று தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவி தனது உரையை பாதியில் நிறுத்தினாலும்.. அவர் சட்டசபையை விட்டு வெளியேறாமல் அமர்ந்து இருந்தார். ஆனால் கடைசி வரையில் அமர்ந்து இருந்தும் எப்போது சபாநாயகர் ஆளுநர் ரவிக்கு நேரடியாக பதிலடி கொடுக்க தொடங்கினாரோ அந்த நொடி.. தேசிய கீதம் வாசிக்கும் முன் ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறினார்.
முக்கியமாக சாவக்கார், கோட்ஸே வழியில் வந்தவர்கள் நீங்கள் என்று சபாநாயகர் அப்பாவு சொன்னதும் ஆளுநர் ரவி வெளியேறினார்.
ரியாக்சன் டிரெண்ட்; இன்று சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர். என் ரவி பாதியில் வெளியேறிய போது முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்சனும்.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்சனும் பெரிய அளவில் கவனம் பெற்றது.
ஆளுநர் ரவி வெளியேறிய போது.. அதை பற்றி கவலையின்றி முதல்வர் ஸ்டாலின் லேசாக சிரித்தபடி பார்த்துக்கொண்டு இருந்தார். ஆனால் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.. என்ன இவர் வெளியேறுகிறார் என்பது போல பதறி சட்டென மரியாதை தருவது போல எழுந்து நின்றனர்.












Click it and Unblock the Notifications