சரசவரவென குறையும் தினசரி கொரோனா.. 2000க்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்பு! உயிரிழப்புகளும் இல்லை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று தினசரி பாதிப்பு 2000க்கு கீழாகக் குறைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கொரோனா பரவ தொடங்கியது. இதன் காரணமாக அப்போது தமிழகத்தில் தினசரி கொரோனா உச்சம் தொட்டது.
அதன் பின்னர் பல மாதங்களுக்குத் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இந்தச் சூழலில் திடீரென சில நாட்களாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

தினசரி பாதிப்பு
கடந்த ஜன. 22இல் மூன்றாம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் தினசரி பாதிப்பு 30,700வரை சென்றது. அதன் பின்னர் அந்தளவுக்கு வைரஸ் பாதிப்பு செல்லவில்லை. இன்று மாநிலத்தில் மொத்தம் 34,966 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஆந்திராவில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 1945 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 35,32,343 ஆக உயர்ந்துள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
தினசரி கொரோனா பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று மாநிலத்தில் 15,843 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 15,409ஆக குறைந்து உள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 5043 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 1801 பேரும் கோவையில் 1232 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்,

உயிரிழப்பு
கொரோனா உயிரிழப்புகளும் கிட்டதட்ட முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்டது. கடந்த வாரத்தில் பல நாட்களில் தினசரி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்து வந்தனர். இதனிடையே இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,032ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் மொத்தம் 2379 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,78,902ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video

மாவட்ட வாரியாக பாதிப்பு
ஒட்டுமொத்தமாக வைரஸ் பாதிப்பு குறைந்து இருந்தாலும் கூட, மூன்று மாவட்டங்களில் மட்டுமே வைரஸ் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 419 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டில் 207 பேருக்கும் கோவையில் 179 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிர எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை. ஓமிக்ரான் அலை ஏற்பட்ட சமயத்தில் 20 தாண்டிய பாசிட்டிவ் விகிதம் இன்று 5.8ஆக உள்ளது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications