53ஆவது நாளாக மாநிலத்தில் குறையும் கொரோனா.. ஆனால் இந்த 'ஒரு' மாவட்டத்தில் மட்டும் நிலைமை மோசம்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று தொடர்ந்து 53ஆவது நாளாகத் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், மாநிலத்தில் இன்று 2505 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் கடந்த சில நாட்களாகவே வைரஸ் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

கொரோனா மூன்றாம் அலை கடந்த மே மாதம் மாநிலத்தில் உச்சமடைந்ததைத் தொடர்ந்து, மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன் பின்னரே, தினசரி வைரஸ் பாதிப்பு மாநிலத்தில் குறையத் தொடங்கியது. ஒரு காலத்தில் 35 ஆயிரத்திற்கு மேல் இருந்த வைரஸ் பாதிப்பு தற்போது 3000க்கும் கீழ் குறைந்துள்ளது.

 தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

இன்று 53ஆவது நாளாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய ஐந்து பேர் உட்பட 2505 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 123 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகும்

 கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்

நேற்று மாநிலத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று உயிரிழப்பு 48ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 34 பேர், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 14 பேர் என மொத்தம் 48 பேர் பலியாகியுள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 11 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள். இதுவரை தமிழ்நாட்டில் 33,502 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

தற்போது மாநிலத்தில் மொத்தம் 31,218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று மட்டும் 3058 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 24,59,223 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

 மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு

மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு

அதிகபட்சமாக இன்று கோவையில் 282 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஈரோட்டில் 187 பேருக்கும், தஞ்சையில் 185 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தஞ்சை மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை தவிரச் சென்னை (160), செங்கல்பட்டு (135), சேலம் (162), திருப்பூர் (148) ஆகிய மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+