சென்னையில் சீனா அதிபர் ஜின்பிங்- விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு
Recommended Video
சென்னை: பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா அதிபர் ஜின்பிங் சென்னை வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜின்ன்பிங்குக்க்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீனா அதிபர் ஷி ஜின்பிங் இன்றும் நாளையும் 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இப்பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படாது.

இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். சீனாவுக்கும் தமிழகத்துக்கும் குறிப்பாக மாமல்லபுரத்துக்குமான உறவு பல்லாயிரம் ஆண்டுகளாக நீடிக்கிறது.
இதனால் ஒட்டுமொத்த தமிழகமுமே சீனா அதிபரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இரு தலைவர்களின் சந்திப்பை தொடர்ந்து சுற்றுலா நகரமான மாமல்லபுரம் புதிய பொலிவுடன் திகழ்கிறது.

சென்னை முதல் மாமல்லபுரம் வரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 15,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சீனா அதிபர் ஜின்பிங்குக்கு சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரையில் சிறப்பான வரவேற்பளிக்க தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளன. இச்சரித்திர நிகழ்வை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications