Mr.ஆளுநர் ஆர்.என். ரவி! சுப்ரீம் கோர்ட் பஞ்சாப் தீர்ப்பை வரிக்கு வரி படிங்க.. ப.சிதம்பரம் சுளீர்!
சென்னை: பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வரிக்கு வரி படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது. பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிறுத்தி வைத்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது.

பஞ்சாப் மாநில அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் போது, பஞ்சாப் மாநில ஆளுநர் நெருப்புடன் விளையாடுவதைப் போல விளையாடுகிறார் என கடும் கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்திருக்கிறது.
பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான பஞ்சாப் மாநில அரசின் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள்:
- அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் மாநில சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை எனில் மறுபரிசீலனை செய்ய சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
- திருப்பி அனுப்பிய மசோதா, சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டால் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்.
- ஆளுநர் பதவி என்பது ஒரு அடையாள பதவி; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் தலைவர் அல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசின் பிரதிநிதி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அமைச்சரவையின் முடிவுகளின்படிதான் ஆளுநர் என்பவர் செயல்பட வேண்டும்
- சட்டசபை நடவடிக்கைகளை முடக்கும் வகையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும் விவகாரத்தில் ஆளுநர் செயல்படக் கூடாது
- ஜனநாயக நடைமுறைகளில் உண்மையான அதிகாரம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் இருக்கிறது; ஆளுநருக்கு இல்லை
இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்தப் பின்னணியில் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் இன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில் ஆளுநருக்கான அதிகாரங்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் கண்டிப்பாக படிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு புரியவில்லை என்றால் மூத்த வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications