தமிழக வரலாற்றில் முதல் முறையாக.. இந்தியாவில் மூன்றாவது மாநிலமாக தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்
சென்னை: தமிழக வரலாற்றில் முதல் முறையாகவும் இந்தியாவில் மூன்றாவது மாநிலமாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்றைய தினம் தாக்கலாகிறது.
Recommended Video
இன்றைய தினம் தாக்கல் செய்யப்படும் தனி பட்ஜெட்டில் இடம் பெறக் கூடிய அம்சங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தி விவசாயச் சிக்கல்களுக்கு உரிய தீர்வும் ஈட்டப்படும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கவலைகளை தீர்க்கும் பட்ஜெட்டாக இது இருக்கும் என ஏற்கெனவே அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கர்நாடகா, ஆந்திராவுக்கு அடுத்தபடியாக விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
இதன் மூலம் நிச்சயம் வேளாண் துறை வளர்ச்சி பெறும் என சொல்லப்படுகிறது. இந்தியாவிலேயே கர்நாடகாவில் முதல் முறையாக கடந்த 2011- 12 ஆம் ஆண்டு வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஒருங்கிணைந்த ஆந்திராவில் கடந்த 2013- 14 ஆம் ஆண்டு தனி வேளாண் பட்ஜெட் தாக்கலானது.
இரு மாநிலங்களும் விவசாயிகளின் பிரச்சினைகளில் தனி கவனம் செலுத்துவதற்காகவே தனி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அந்த வகையில் ஏராளமான விவசாயிகளை கொண்டுள்ள தமிழகமும் இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
தெலுங்கானா, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களும் தனி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தன. ஆனால் இதுநாள் வரை செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் தாக்கல் செய்யப்படும் இந்த வேளாண் பட்ஜெட்டால் வேளாண் உற்பத்தி அதிகரிக்கவும் புதிய வேளாண் திட்டங்களில் விவசாயிகளை ஈடுபடுத்துவதை அதிகரிக்கவும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications