90 நிமிடங்களில் 100 மி.மீ.. தூத்துக்குடியில் மிக கன மழை! தென் மாவட்டங்கள் உஷார்- தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: தூத்துக்குடியில் வெறும் 90 நிமிடங்களில் 100 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்து வருகிறது.
தூத்துக்குடியில் வெறும் 90 நிமிடங்களில் 100 மில்லி மீட்டர், அதாவது 10 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்கள்
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இன்று கடுமையான மழை காத்திருக்கிறது என்று அவர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்த மூன்று மாவட்டங்கள் மீதும் கருமேகங்கள் சூழ்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது.

இதுவரை இல்லாத மழை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று பிரதீப் ஜான் கணித்துள்ளார். தூத்துக்குடியில் இந்த வருடத்தில் இல்லாத அளவுக்கான கன மழை பெய்து உள்ளதாகவும், கன்னியாகுமரி முதல் சென்னை வரை பெரிய மழை காத்திருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் இன்று கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளியே போக வேண்டாம்
இதனிடையே தமிழகம் முழுக்க கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அனாவசியமாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. கனமழை பெய்வதால் பழைய கட்டடங்கள் அருகில் செல்ல வேண்டாம் என்று மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

பழைய கட்டிடங்கள்
பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுக்கவே கன மழை பெய்யும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே தூத்துக்குடியில் இன்று மதியம் 2 மணிவரை 15 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே மாவட்டத்தின் சாத்தான்குளம் பகுதியில் 6 செ.மீ மழை பெய்துள்ளது.
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications