போற போக்கைப் பார்த்தா.. டிரோன்களின் சொர்க்கபுரியாக மாறிடும் போலயே தமிழ்நாடு.. சூப்பர் வேகம்!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாநிலத்தை ட்ரோன் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.
அறிவியல் வேகமாக வளர்ந்து வருகிறது. அனைத்திலும் புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. அந்த காலத்தில் நாற்று நடுதல், களை பறித்தல், அறுவடை செய்தல் உள்ளிட்டவற்றை கூலியாட்கள் கொண்டு செய்யப்பட்டன.
ஆனால் தற்போது அவை எல்லாவற்றிற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. அந்த வகையில் விமானங்களில் சரக்குகளையும் பயணம் செய்யவும் போரிடவும் மட்டுமே இருந்த நிலையில் தற்போது டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் இன்று பல்வேறு துறைகளில் பயன்பட்டு வருகின்றன.

பேரிடர்
வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், வனத்துறை, வனஉயிரி, கல்வி, ஊரக வளர்ச்சி, போக்குவரத்து மேலாண்மை, சுரங்கம் ஆகிய துறைகளில் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண்துறையில் டிரோன்கள் திறம்பட செயல்படுகின்றன. பயிர்களுக்கு பூச்சிக் கொல்லிகளை டிரோன்கள் மூலம் தெளிக்கலாம்.

மருந்துகள்
பூச்சிக்கொல்லிகளை மனிதர்கள் அடிக்கும் போது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். டிரோன்களால் அவை ஏற்படாது. குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவுகளில் டிரோன்கள் மருந்துகளை அடிக்கும். அது போல் வெட்டுக்கிளி உள்ளிட்ட பூச்சிகளை கட்டுப்படுத்தவும் இந்த டிரோன்களை கொண்டு பூச்சி மருந்து அடிக்கலாம்.

நடமாட்டத்தை
இவ்வளவு ஏன் கொரோனா வைரஸ் பல்கி பெருகி வரும் நிலையில் வீடுகள், உயர்ந்த கட்டடங்களில் டிரோன்கள் மூலமே கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகின்றன. தமிழகத்திற்கு அதிக அளவிலான டிரோன்கள் தேவைப்படுகின்றன. குடிமராமத்து பணிகளும் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் விஐபிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அவர்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் பயன்படுகிறது.

டிரோன் உற்பத்தி
மருத்துவத் துறையில் உறுப்புகளை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு விரைவாக கொண்டு செல்ல இவை உதவுகின்றன. இவை மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கக் கூடும். இதனால் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கி தொழில்நுட்பத்தை கொண்டு தமிழகத்தை டிரோன் உற்பத்தி மையமாக மாற்ற சாத்தியக் கூறுகளை தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.
Recommended Video

விரைவில்
மாநில வளர்ச்சி கொள்கை கவுன்சில் இது தொடர்பாக ஒரு ஆலோசனையை நடத்தியுள்ளது. எனவே விரைவில் டிரோன்களின் சொர்க்கபுரியாக தமிழகம் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தமிழகம் நவீன தொழில்நுட்பத்தில் சூப்பர் வேகத்தில் முன்னேறி வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications