சென்னையில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய பக்கோடா சுடும் போராட்டம்...!
சென்னை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் அதனை போக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறி இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் பக்கோடா சுடுவதை போல் சித்தரித்து கவன ஈர்ப்பு போராட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஹசன் மவுலானா, ஜெபி மாத்யூ, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பபட்டன.

நூதனப் போராட்டம்
நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக வேலைவாய்ப்பின்மையை போக்கக் கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் மத்திய அரசைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸார் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பக்கோடா சுடும் போராட்டம் நடைபெற்றது.

திருவல்லிக்கேணி
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நேதாஜி இல்லம் முன்பு திரண்ட இளைஞர் காங்கிரஸார், அங்கு அடுப்பை பற்ற வைத்து பக்கோடா தயாரித்தனர். பட்டம் வாங்கும் போது அணியும் அங்கியை அணிந்தவாறு பக்கோடா சுட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியை அந்த வழியாக சென்ற மக்கள் திரும்பிப் பார்க்க தவறவில்லை. மேலும், சுட்ட பக்கோடாவை ஒரு பாக்ஸில் வைத்து பேருந்துக்காக நின்றவர்கள், அந்த வழியாக சாலையில் சென்றவர்களுக்கு இளைஞர் காங்கிரஸார் வழங்கினர்.

வேலைவாய்ப்பு
மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாகவும், வரலாறு காணாத அளவுக்கு வேலையின்மை நிலை ஏற்பட பிரதமர் மோடியே காரணம் எனவும் புகார் கூறினர். அதைத்தொடர்ந்து வேலைவாய்ப்பை உருவாக்கக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா, மற்றும் கேரளாவில் இருந்து சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த ஜெபி மாத்யூ ஆகியோர் அதில் பங்கேற்றனர்.

வெறுப்பு
இந்நிலையில் வேலையின்மையின் விரக்தியால், படித்து பட்டம்பெற்றவர்கள் கூட ஷூ பாலீஷ் போட வேண்டிய அவலநிலைதான் நாட்டில் உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அதனை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஷூ பாலிஷ் போடுவது போன்ற நூதனப் போராட்டத்தை நடத்தியதாகவும் மற்றபடி எந்த தொழிலையும் தாங்கள் குறை கூறவில்லை எனவும் இளைஞர் காங்கிரஸார் கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications