Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முக்கிய மூவ்.. தமிழ்நாடு முழுக்க வருது மாதாந்திர மின் கட்டண முறை? எப்போது அமலுக்கு வரும்! தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடக்க உள்ள நிலையில்.. அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் மீண்டும் மாதாந்திர மின் கட்டணம் கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் நடந்துவருகிறதாம். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்பதால் அந்த சட்டம் அமலுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மாதாந்திர மின் கணக்கீட்டை அமல்படுத்துவது குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. எந்த சிக்கல்களும் இல்லாத பட்சத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்கிடையில், மாதாந்திர மின் கட்டணம் குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கின்றன. அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு, மாதாந்திர கட்டணம் படிப்படியாக அமலாகும்.

electricity eb

தமிழக அரசு புதிய மின் இணைப்புகளுக்கான காலக்கெடுவை அறிவித்துள்ளது. வீடுகள், கடைகள் போன்ற தாழ்வழுத்த பிரிவில் விண்ணப்பத்தால், அதிகபட்சம் மூன்று நாட்களில் மின்சாரம் வழங்கப்படும். கூடுதல் மின் சாதனங்கள், சிறிய மின்மாற்றிகள் தேவையில்லையெனில் மூன்று நாட்களில் கிடைக்கும். இல்லையெனில், ஏழு நாட்களுக்குள் மின்சாரம் வழங்கப்பட வேண்டும். இத்திட்டம் பிப்ரவரியில் வெளியாகி தற்போது நடைமுறையில் உள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் மாதாந்திர மின் கட்டணம்

தமிழ்நாடு மின்சார வாரியம் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மீட்டர்களை நேரடியாக வாங்க முடியும். பொதுமக்கள் மின்வாரியத்திடம் காத்திருக்க வேண்டியதில்லை. மீட்டர் பற்றாக்குறையைத் தவிர்க்க இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். நிறுவனங்கள், கடைகள், வீடுகள் என அனைத்து நுகர்வோரும் வாங்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மீட்டர் வாங்கினாலும், நுகர்வோர் டேம்பர்-ப்ரூஃப் சரிபார்ப்பிற்கு டாங்கெட்கோவிடம் சமர்ப்பிக்க வேண்டும். மின்வாரிய அதிகாரிகள் "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" அடிப்படையில் பொருத்துவார்கள். முன்பு டாங்கெட்கோ மொத்தமாக வாங்கி, சோதனை செய்து அனுப்பியது.

தற்போது, டாங்கெட்கோ அங்கீகரித்த நிறுவனங்களிடம் மக்கள் நேரடியாக வாங்கலாம். இருப்பினும், ஈபி மீட்டர் தட்டுப்பாடு ஒரு சிக்கலாக உள்ளது. இது புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. இந்த தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட் மீட்டர்: இபி கட்டணம் முறை

மேல்நிலை கேபிள்கள் உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு அதிக மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) இதற்கு நடவடிக்கை எடுத்தது. அதிக கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டது.

வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை நுகர்வோர் கணக்கில் திருப்பிச் செலுத்த ஆணையம் உத்தரவிட்டது. அதை அடுத்தடுத்த பில்களுடன் சரிசெய்யவும் கூறியது. இதற்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருள் உடனடியாக திருத்தப்பட வேண்டும். தற்போதைய ஏற்பாடுகளுடன் மேம்பாட்டு கட்டணங்கள் வசூலிக்கப்படாது.

இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள கூடுதல் மேம்பாட்டுக் கட்டணங்கள் விண்ணப்பதாரர்களுக்கு திருப்பித் தரப்பட வேண்டும். அல்லது முன்கூட்டியே நுகர்வுக் கட்டணமாகக் கருதி ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டது. மேல்நிலை கேபிள்களுக்கு குறைவான கட்டணமும், நிலத்தடி கேபிள்களுக்கு அதிக கட்டணமும் வழக்கமாகும்.

மாதாந்திர கட்டணம் கவனம்

மாதாந்திர கட்டணம் கொண்டு வருவதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன. ரீடிங் எடுப்பது குறித்தும் முக்கிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வுகளில் சிக்கல்கள் இல்லாத பட்சத்தில் மாதாந்திர ரீடிங் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த சீர்திருத்தங்கள் தமிழக மின் நுகர்வோருக்கு பலன் அளிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+