வீட்டில் இபி மீட்டர் பொருத்தும் முறை அடியோடு மாறுகிறது.. பழைய மாதிரி இல்லை.. மின்சார வாரியம் அதிரடி
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர் நேரடியாக மீட்டர்களை வாங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இனிமேல் மின்சார வாரியத்திடம் இருந்து மட்டும் மீட்டர் வாங்குவதற்காக மக்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
மீட்டர் வாங்க மக்கள் பலர் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வீடுகள் உட்பட அனைத்து நுகர்வோருக்கும் பொருந்தும் வகையில் மீட்டர் விற்கும் நிறுவனங்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. இவர்களிடம் மீட்டர் வாங்கிக்கொள்ளலாம். மின்சார வாரியத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
இவர்களிடம் மீட்டர் வாங்கிய பிறகு, நுகர்வோர் மீட்டர்களை நிறுவுவதற்கு முன் டேம்பர்-ப்ரூஃப் செய்ய டாங்கெட்கோவிடம் சமர்ப்பிக்க வேண்டும். மின்சார வாரிய அதிகாரிகள், 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் மீட்டர்களை பொருத்துவார்கள். முன்னதாக, டாங்கெட்கோ மீட்டர்களை கொள்முதல் செய்து, சோதனை செய்து, பிரிவு அலுவலகங்களுக்கு மொத்தமாக அனுப்பியது. இனிமேல் டான்ஜெட்கோ அங்கீகரித்த நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக மக்களே வாங்க முடியும்.
எச்சரிக்கை: இது போக தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மின்சார வாரியம் விடுத்துள்ளது. இபி பில் செலுத்துவதில் நடக்கும் மோசடி ஒன்றை பற்றி எச்சரித்துள்ளது. tangedcoவின் அதிகாரப்பூர்வ பக்கம் தவிர வேறு மெசேஜ் மூலம் வர கூடிய லிங்கை கிளிக் செய்து பணம் செலுத்த கூடாது. சில மோசடியாளர்கள் இபி பில் கட்டுங்கள் என்று உங்களுக்கு மோசடி லிங்கை அனுப்பி பணம் வசூலிக்க வாய்ப்புள்ளது என்று இபி எச்சரித்துள்ளது.
யாருக்கு பொருந்தும்: இதில் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்த முடியும். தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்க கூடிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது.
எச்சரிக்கை: இந்த நிலையில்தான் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மின்சார வாரியம் விடுத்துள்ளது.
அதில், தற்போது, மீட்டர் ரீடிங் எடுத்தவுடன், 500 யூனிட் மேல் உள்ளவர்களுக்கு, முதல் படியாக, மின்கட்டண லிங்க், வாட்ஸ்அப் (Push) செய்தியாக அனுப்பப்படுகிறது. நுகர்வோரின் வரவேற்பை பொறுத்து மேம்படுத்தப்படும். எனவே, மின்வாரிய அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணில் Hi என்று ' பேச ' முயற்சிக்க வேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம், என்று கூறியுள்ளது.
இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இனி கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லையென்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி வெளியான அறிவிப்பு இந்த மாதம் நடைமுறைக்கு வருகிறது,












Click it and Unblock the Notifications