என்னய்யா நாடு இது? 2 வார லாக்டவுன் எதிரொலி- ஒரே நாளில் ரூ426 கோடிக்கு மது விற்பனை-டாப் 1-ல் சென்னை!
சென்னை: கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் நாளை முதல் 2 வாரம் லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ460 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
Recommended Video
மே மாதம் 2-வது, 3-வது வாரங்களில் கொரோனா அலை தாக்கம் உக்கிரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்தனர். இதனடிப்படையில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மே 10-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது.

2 நாட்கள் திறப்பு
இந்த முழு லாக்டவுனை முழுமையாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அத்துடன் பொதுமக்கள் லாக்டவுனை எதிர்கொள்ளும் வகையில் நேற்றும் இன்றும் அனைத்து கடைகளும் முழு அளவில் இரவு 9 மணி வரை இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

டாஸ்மாக் கடைகள் மூடப்படும்
டாஸ்மாக் மதுபான கடைகள் சனி, ஞாயிறுகளில் மாலை 6 மணிவரை மட்டும் செயல்படும் என்றும் 2 வார லாக்டவுன் காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் நேற்றும் இன்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்காமல் குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.

ரூ426 கோடிக்கு விற்பனை
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் ரூ426 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. லாக்டவுன் அமல்படுத்தப்படுவதால் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காகவே மூட்டை மூட்டையாக மதுபானங்களை பல்லாயிரம் ரூபாய்க்கு வாங்கி பதுக்கியவர்களும் இதில் ஏராளம்.

சென்னையில் ரூ100 கோடிக்கு விற்அனை
தமிழ்நாட்டில் சென்னை மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் ரூ100 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கின்றன. மதுரை மண்டலத்தில் ரூ.87.28 கோடி, திருச்சி மண்டலத்தில் திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. சேலம் மண்டலத்தில் ரூ.79.82 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications