வாசலில் எமனாக நின்ற மாமனாரை பார்த்து பூரித்த நிறைமாத கர்ப்பிணி.. யாருமே தெலுங்கானாவில் எதிர்பார்க்கல
சென்னை: ஆணவ கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களாகவும் இருப்பதால், பெண் வீட்டாரே பெரும்பாலும் ஆணவக்கொலையில் ஈடுபட்டு விடுகிறார்கள்.. மாற்று சாதியினரை காதலிப்பதையும், திருமணம் செய்வதையும் அவமானமாக நினைத்து புழுங்குகிறார்கள். இதனாலேயே பெண்களும் சேர்த்து கொலை செய்யப்படுகிறார்கள்.. இதற்கு தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுமே விதிவிலக்கல்ல. இதோ தெலுங்கானாவில் நடந்துள்ள சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
தெலங்கானா மாநிலம் கொமரம் பீம் ஆசிஃபாபாத் மாவட்டத்தில் உள்ளது கெர்ரே என்ற கிராமம்.. இங்கு சேகர் என்பவர் வசித்து வருகிறார்.. டிரைவர் வேலை பார்த்து வரும் சேகர், தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த ராவணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

ராவணி பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவராம்.. எனவே சேகரின் வீட்டில், இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.. ஆனாலும் ராவணியை உயிருக்கு உயிராக விரும்பிய சேகர், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2024 அக்டோபரில் ராவணியை திருமணம் செய்து கொண்டார்.
நிறைமாத கர்ப்பிணி
இது சேகரின் பெற்றோருக்கு கடுமையான ஆத்திரத்தையும் கோபத்தையும் தந்தது.. அவ்வளவு சொல்லியும், பழங்குடியினர் சமூக பெண்ணை தங்கள் மகன் திருமணம் செய்து கொண்டாரே என்று, குடும்பத்தினர் கொதிப்படைந்தனர்.. திருமண ஜோடியையும் வீட்டிற்குள் சேர்க்க மறுத்துவிட்டனர்.
ஆனால், ராவணியின் வீட்டில் மணமக்களை ஏற்று ஆசீர்வதித்தனர்.. இதனால், சேகர், ராவணியின் வீட்டிலேயே தங்கி வந்துள்ளார்.. இப்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார் ராவணி.. இப்போது முதலாம் வருடம் திருமண நாள், தலை தீபாவளி என்பதால், அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடிவு செய்திருந்தனர்.
காட்டுக்கு சென்ற கணவர்
இதற்காக சேகர் தன்னுடைய மாமியார், மாமனாருடன் சேர்ந்து சமையல் செய்வதற்கு தேவையான விறகு சேகரிக்க காட்டுப்பகுதிக்கு சென்றிருக்கிறார்.. இதனை சேகரின் அப்பா சாத்தையா கவனித்துள்ளார்.,. அனைவருமே காட்டுக்குள் வந்துவிட்டதால், மருமகள் ராவணி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதையும் தெரிந்து கொண்டு, அங்கு சென்றிருக்கிறார்.
திடீரென வாசலில் மாமனார் வந்து நிற்கவும், மனம் மாறி வந்திருப்பதாக நினைத்து ராவணி மகிழ்ச்சியில் துள்ளினார்.. நிறைமாத கர்ப்பிணி என்பதாலும், தலை தீபாவளி மற்றும் முதலாம் ஆண்டு திருமண நாள் என்பதாலும், வாழ்த்து சொல்ல வந்திருப்பதாக நினைத்து, வீட்டிற்குள் மாமனாரை வரவேற்று உபசரித்துள்ளார்..
கோடாரி மருமகள்
அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து மருமகளை வெட்ட பாய்ந்தார்.. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராவணி, அங்கிருந்து ஓட முயற்சித்தார். அதற்குள் ராவணியின் கழுத்தின் பின் பகுதியில் கோடாரி வெட்டுப்பட்டது.
ரத்தம் வழிய வழிய, உடனே மாமனாரிடம் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினார்.. ஆனால், வெறி கொண்ட மாமனார், கர்ப்பிணி என்றும் பார்க்காமல் ராவணியை விரட்டி விரட்டிகோடாரியால் வெட்டினார்.. இதில் ரத்த வெள்ளத்தில் கர்ப்பிணி சரிந்து விழுந்தார்..
அதற்குள் இந்த தகவலறிந்து காட்டுக்குள்ளிருந்து கணவர் சேகர் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார்.. அதற்குள் ராவணியின் உயிர் பிரிந்துவிட்டது..
கதறிய கிராம மக்கள்
நிறைமாத கர்ப்பிணியின் சடலத்தை கண்டு அந்த ஊர் மக்களே கதறி அழுதனர்.. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாமனார் சாத்தையாவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை, ஒரு வருடம் கழித்து வஞ்சம் தீர்த்த இந்த சம்பவம் தெலங்கானாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications