கோவில்களில் திருவிழாக்களுக்கு எப்போது அனுமதி?.. அமைச்சர் சேகர்பாபு பதில் இதுதான்!
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருத்தேர் வீதியுலாவை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:-
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் திருத்தேர் வீதியுலா வருவது தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் வழிகாட்டு முறைகளுக்கு உட்பட்டு கோவில்களில் வீதியுலா தொடங்கியுள்ளது.

நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி
தமிழ்நாடு கோவில்களில் உள்ள நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி கடந்த 13-ம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. நகைகளை உருக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவில் இருக்கும் தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு எவ்வளவு நகைகள் உருக்கப்பட்டுள்ளது? அதன் எடை என்பது என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளிப்படைத் தன்மையுடன் தெரிவிக்கப்படும்.

திருவிழாக்களுக்கு எப்போது அனுமதி?
கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் கோவில்களை திறப்பது தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா குறைந்த பிறகு கோவில்களில் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். 11 வருடங்களாக பல கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத திருத்தேர்களும் மீண்டும் பயன்பட்டிற்கு கொண்டு வரப்படும்.

ஆக்கப்பூர்வமான நடவடிக்கை
திருத்தணி கோயிலில் இந்த மாத இறுதியில் திருத்தேர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டும். குறைகள் இருப்பதை சுட்டிக்காட்டினால் அதற்கேற்ப ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், ' பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்து வருகிறாரே'' என்று கேள்வி எழுப்பினார்கள்.

பதிலடி தரப்படும்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, '' பா.ஜ.க.வினர் தங்களை காட்டிக் கொள்வதற்காக வேண்டும் என்றே அரசை குறை கூறி வருகிறார்கள். அண்ணாமலை இதைத்தான் செய்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் குறைகளை சுட்டிக்காட்டி இருந்தால் பா.ஜ.க நடுநிலையான கட்சி என கூறலாம். ஆதாரம் இல்லாமல் அரசை குறை கூறினால் அதற்கு தகுந்த முறையில் பதிலடி தரப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications