கோவில்களில் திருவிழாக்களுக்கு எப்போது அனுமதி?.. அமைச்சர் சேகர்பாபு பதில் இதுதான்!
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருத்தேர் வீதியுலாவை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:-
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் திருத்தேர் வீதியுலா வருவது தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் வழிகாட்டு முறைகளுக்கு உட்பட்டு கோவில்களில் வீதியுலா தொடங்கியுள்ளது.

நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி
தமிழ்நாடு கோவில்களில் உள்ள நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி கடந்த 13-ம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. நகைகளை உருக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவில் இருக்கும் தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு எவ்வளவு நகைகள் உருக்கப்பட்டுள்ளது? அதன் எடை என்பது என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளிப்படைத் தன்மையுடன் தெரிவிக்கப்படும்.

திருவிழாக்களுக்கு எப்போது அனுமதி?
கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் கோவில்களை திறப்பது தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா குறைந்த பிறகு கோவில்களில் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். 11 வருடங்களாக பல கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத திருத்தேர்களும் மீண்டும் பயன்பட்டிற்கு கொண்டு வரப்படும்.

ஆக்கப்பூர்வமான நடவடிக்கை
திருத்தணி கோயிலில் இந்த மாத இறுதியில் திருத்தேர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டும். குறைகள் இருப்பதை சுட்டிக்காட்டினால் அதற்கேற்ப ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், ' பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்து வருகிறாரே'' என்று கேள்வி எழுப்பினார்கள்.

பதிலடி தரப்படும்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, '' பா.ஜ.க.வினர் தங்களை காட்டிக் கொள்வதற்காக வேண்டும் என்றே அரசை குறை கூறி வருகிறார்கள். அண்ணாமலை இதைத்தான் செய்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் குறைகளை சுட்டிக்காட்டி இருந்தால் பா.ஜ.க நடுநிலையான கட்சி என கூறலாம். ஆதாரம் இல்லாமல் அரசை குறை கூறினால் அதற்கு தகுந்த முறையில் பதிலடி தரப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications