அதிமுகவிற்கு இது மிக முக்கியமான தேர்தல்! பெரும் சவாலை சந்திக்க போகும் எடப்பாடியார்?
சென்னை: 2021 சட்டசபை தேர்தல் அதிமுகவிற்கு மிக முக்கியமான தேர்தல்.. இதில் கிடைக்கும் வெற்றியும், தோல்வியும் அதிமுக தலைமையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுதான்.
தமிழகத்தில் ஆளும் கட்சி ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்தது கடந்த 30 வருடங்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மட்டுமே. 2016 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டார்.
இவரது இந்த அணுகுமுறைக்கு வெற்றியும் கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம், அதிமுகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளாமல் போனது தான். தனித் தனியாக களம் கண்டதால் தோற்றுப்போயின,.

அதிமுக மோதுகிறது
ஆனால் இந்த முறை அப்படி இல்லை. சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் மிகப்பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் அணி திரண்டுள்ளன. ஆனால் அதிமுக கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி ஆகியவை இல்லாமல் தேர்தலை சந்திக்க போகிறது.

ஸ்டாலின்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக என்பது ஓபிஎஸ்,இபிஎஸ் ஆகியோரின் தலைமைக்கு மாறி உள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து அதிமுக சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. இதேபோல் கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக என்பது ஸ்டாலின் தலைமையின் கீழ் வந்து விட்டது ஸ்டாலினை முதல்வராக அறிவித்து சட்டசபை தேர்தலில் திமுக எதிர்கொள்கிறது. திமுகவை பொறுத்தவைரை ஜெயித்தாலும் தோற்றாலும் வழக்கம் போல் ஸ்டாலினே தலைமையில் இருப்பார்கள்.

அதிமுக வென்றால் மாறும்
இதேபோல் அதிமுகவை பொறுத்தவரை இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அதன் தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுப்பார். தனிப்பெரும் தலைவராக எடப்பாடி பழனிசாமி கொண்டாடப்படுவார். கட்சியிலும் ஆட்சியிலும் முழு அதிகாரமும் எடப்பாடி பழனிசாமி கைக்கு வந்துவிடும். அதிமுகவில் எல்லோருமே எடப்பாடியாரின் ஆதரவாளர்களாக மாறிவிடுவார்கள். கொங்கு மண்டலம், மேற்கு மண்டலம் மட்டுமின்றி தென் மண்டலம் என அனைத்து மண்டலத்திலும் கட்சியிலும் முழு அதிகாரம் உள்ளவராக மாறிவிடுவார்.

தலைமையை ஏற்பார்களா
ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இந்த தேர்தல் களம் கடும் சவால் நிறைந்ததாக உள்ளது. மக்களை கவர எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தான் நிகழ்த்திய சாதனைகளை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவரது தலைமையை மக்கள் ஏற்பார்களா அல்லது நிராகரிப்பார்களா என்பது மே 2ம் தேதி தெரிந்துவிடும். மொத்தத்தில் இந்த தேர்தல் அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கு மிக முக்கியமான தேர்தல்.
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications