Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்று தொடக்கம்.. கடற்கரை- செங்கல்பட்டு-தாம்பரம் நேர அட்டவணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஏசி மின்சார ரயில் ஏப்ரல் 19ம் தேதியான இன்று முதல் ஓடப்போகிறது. சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே முதல் ஏசி மின்சார ரயில் சேவை காலை 7மணிக்கு தொடங்குகிறது. ஒரு நாளில் மூன்று சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து ஏசி மின்சார ரயில்சேவை இயங்க போகிறது. இந்த ரயில் கடற்கரை தாம்பரம் வழித்தடத்தில் முக்கியமான ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும்.

சென்னையில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், ஏசி மின்சார ரயில் விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்த ஏசி மின்சார ரயில்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு ஓட்டத்திற்கு தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில் ஏசி மின்சார ரயில் இன்று (ஏப்ரல் 19ம் தேதி) முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு இரண்டு ரயில் சேவைகளும். தாம்பரத்திகு ஒரு ரயில் சேவைகளும் ஏசி விரைவு ரயில்கள் வழங்க உள்ளன. அதேஅளவில் மறுமார்க்கமாக ரயில்கள் ஓட உள்ளன.

the First Air conditioned EMU train service from 19th April 2025 in Chennai Beach Chengalpattu

சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் சேவை நேர அட்டவணை விவரங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதன் படி, சென்னை கடற்கரைக்கு ஏப்ரல் 19ம் தேதியான நாளை முதல் காலை 7மணிக்கு ஏசி மின்சார ரயில் புறப்படுகிறது. அதன்பிறகு கோட்டை, பூங்கா, எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும் ஏசி ரயில். அடுத்ததாக மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், பரனூர் ரயில் நிலையங்களில் நின்று செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு காலை 8.35 மணிக்கு சென்றுவிடும்.

பரனூருக்கு இந்த ரயில் வெறும் 8.17க்கு எல்லாம் சென்றுவிடும் என்பதால் வெறும் ஒரு மணி நேரத்திலேயே சென்னை செங்கல்பட்டு இடையே கிட்டத்தட்ட சென்றுவிடும் அளவிற்கு ஏசிமின்சார ரயில் வேகமாக சென்றுவிடும். வேலைக்கு செல்வோருக்கு இந்த ரயில் பயனுள்ளதாகஇருக்க போகிறது.

the First Air conditioned EMU train service from 19th April 2025 in Chennai Beach Chengalpattu

அதேபோல் மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து 9 மணிக்கு புறப்படும் ஏசி மின்சார ரயில், பரனூர், சிங்க பெருமாள் கோவில், பொத்தேரி,கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், திரிசூலம், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், எழும்பூர், பூங்கா, கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று காலை 10.30க்கு கடற்கரைக்கு வந்துவிடும். சென்னை புறநகர் பகுதியில் இருந்து புறப்பட்டு கிண்டி, தாம்பரம் பகுதியில் வேலை செய்யும் பலருக்கு இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும் என தெரிகிறது.

the First Air conditioned EMU train service from 19th April 2025 in Chennai Beach Chengalpattu

அதேபோல் பிற்பகல் 3.45க்கு கடற்கரையில் இருந்து புறப்படும் ஏசி ரயில் முக்கிய ரயில் நிலையில் மட்டும் நின்று, செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு மாலை 5.25க்கு வந்து சேருகிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45க்கு புறப்படும் ஏசி மின்சார ரயில் இரவு 7.15க்கு சென்னை கடற்கரை வந்து சேரும்.

அதேபோல் மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.35க்கு புறப்படும் ரயில், வழக்கமான எல்லா ரயில் நிலையங்களிலும் நின்று இரவு 8.30க்கு தாம்பரத்தை அடையும். அத்துடன் ரயில் நிறுத்தி வைக்கப்படும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து காலை 5.45க்கு புறப்பட்டு 6.45க்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும்.இந்த ரயில் சென்னை கடற்கரை வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இந்த ஏசி மின்சார ரயிலில் சிசிடிவி உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+