Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் நூலகங்கள் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறப்பு.. தமிழக அரசு அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நூலகங்களைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: "தமிழகத்தில் கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 638 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களைத் திறப்பது குறித்து பொது நூலகங்கள் இயக்குநா் அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தார்கள்.

 The libraries in Tamil Nadu open from September 1

அதன்படி, கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள் என அனைத்து நூலகங்களையும் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது இந்த நூலகங்களில் புத்தகங்களைப் பெறுவது, குறிப்புகளை எடுப்பது, புத்தகங்களை எடுத்து வந்து படிப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

கிளை மற்றும் கிராமப்புற நூலகங்களில் புத்தகங்களைக் கையெழுத்திட்டு பெறும் பணியை மட்டும் மேற்கொள்ளலாம். அனைத்து நூலகங்களும் வேலை நாள்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என்று கூறியுள்ளார்.

இதனிடையே 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நூலகத்திற்குள் வர அனுமதி இல்லை என்று நூலகத்துறை அறிவித்துள்ளது.

Recommended Video

    Jayalalitha-வின் Veda Illam Library ரகசியம் | Oneindia Tamil

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+