கொளுத்தும் வெயிலுக்கு ஓய்வு கிடைக்குமா? வானிலை ஆய்வு மையம் தந்த அப்டேட்! உங்க ஊர்ல மழைக்கு வாய்ப்பு?
சென்னை : தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தென்தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் தற்போது கோடை காலத்தின் துவக்கத்தில் உள்ள போதே பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், அவ்வப்போது சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது.
இரவு நேரங்களில் வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்தாலும், பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தென்தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை...4 நாட்களுக்கு நீடிக்குமாம் - சென்னை வெயில்தான்
வானிலை ஆய்வு மையம் தகவல்
பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் கடுமையான வெயில் காரணமாக குறைந்து காணப்படும் நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தென்தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகத்தில் மழை
21ஆம் தேதியான நாளை தென் தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
லேசான மழைக்கு வாய்ப்பு
அடுத்த நாள் , தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25ஆம் தேதி தென்தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் ஏற்காடு (சேலம்), தாளவாடி (ஈரோடு), டேனிஷ்பேட்டை (சேலம்), சாந்தி விஜயா பள்ளி, மசினகுடி (நீலகிரி) ஆகிய பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழை அளவானது பதிவாகியுள்ளது.