Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெஞ்சல் புயல்! திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம்! தென் மாவட்டத்தினர் சென்னை வர புது ரூட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெஞ்சல் புயலால் தேசிய நெடுஞ்சாலைகளி்ல் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர இந்த ரூட்டை பிடித்தால் வந்துவிடலாம்.

பெஞ்சல் புயல் காரைக்கால் டூ மகாபலிபுரம் இடையே கடந்த நவம்பர் 30ஆம் தேதி கரையை கடந்தது. இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் அதீத மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

cyclone fengal chennai trichy

அந்த வகையில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வருவோர் இந்த தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இந்த சாலையில் வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை வருவோர் திருவண்ணாமலை வழியாக திண்டிவனம் புறவழிச்சாலையில் பயணித்தால் தேசிய சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை வந்தடையலாம்.

அதாவது அந்த தேசிய நெடுஞ்சாலையில் மேற்கண்ட இரு கிராமங்களுக்கான சாலைதான் துண்டிக்கப்பட்டுள்ளது. மற்ற சாலைகள் நன்றாக இருப்பதால் திண்டிவனம் புறவழிச்சாலையை பிடித்தால் சென்னைக்கு வரும் தேசிய நெடுஞ்சாலையை அடையலாம்.

அதாவது திருச்சி மார்க்கமாக சென்னைக்கு வருவோர் ஆசனூர், இளவனாசூர்,திருக்கோயிலூர், திருவண்ணாமலை, செஞ்சி வந்தால் திண்டிவனம் புறவழிச்சாலை வந்துவிடும். அதன் வழியாக சென்னையை அடையலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+