வாடகை தாய்.. "அந்த" ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கிடைத்தால் எல்லாம் ஓவர்.. சிக்கலில் நயன் - விக்னேஷ்
சென்னை: நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ள நிலையில், இவர்கள் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றது சர்ச்சையாகி உள்ளது.
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு வாடகை தாய் முறையின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் நடந்து 6 மாதம் கூட முழுமையாக ஆகவில்லை. இந்த நிலையில்தான் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
வாடகை தாய் முறைக்கு இந்தியாவில் தடை உள்ளது. ஒரு ஆண் - பெண் இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் பாதிப்பு இருந்தால் மட்டுமே வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
அதற்கும் நிறைய விதிகள் உள்ளன.

எப்படி பெற்றனர்
மொத்தம் இரண்டு வகையான வாடகை தாய் முறைகள் உள்ளன. முதல் முறை Surrogacy in the traditional sense அதாவது பாரம்பரிய வகை. இந்த வகை மூலம் தம்பதியில் ஆணின் விந்தணு எடுக்கப்பட்டு வாடகை தாய் செயற்கையான முறையில் கருவூட்டப்படுகிறார். இரண்டாவது முறை Gestational surrogacy எனப்படும் கர்ப்பகால வாடகைத் தாய். இந்த முறையில் ஆணின் விந்தணு, அவரின் மனைவியின் கரு முட்டை சேர்ந்து கருவாக உருவாக்கப்படும். பின்னர் அந்த கரு வாடகை தாயின் வயிற்றில் சேர்க்கப்படும். இப்படித்தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றதாக கூறப்படுகிறது.

சட்டம்
இந்த விவகாரத்தில் சட்ட விதிகள் சொல்லும் இன்னொரு விஷயமும் இருக்கிறது. வெளிநாடுகளில் சென்று குழந்தை பெற்றால் பிரச்சனை இல்லை என்று கூறுகிறது. அதாவது இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று தம்பதிகள் வாடகை தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் சட்டப்படி குழந்தைக்கு தாய், தகப்பனாக ஆக முடியும். அதன்பின் அவர்கள் இந்தியாவிற்கு திரும்பலாம். இப்போதும் கூட இந்தியாவில் இருந்து பலர் இப்படி வெளிநாடு செல்கிறார்கள்.

ரஷ்யா
முக்கியமாக இந்தியாவில் இருந்து பலர் ரஷ்யாவிற்கு சென்று இப்படி வாடகை தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இந்த குழந்தை தாய் விவகாரத்தில் முன்பு டீலர்களாக இருந்தவர்கள் கூட இப்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கிளைகளை தொடங்கி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் தம்பதிகளுக்கு வெளிநாடுகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை அவர்கள் ஏற்படுத்திக்கொடுக்கின்றனர்.

வாடகை தாய்
இந்த நிலையில்தான் தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு குழந்தை பிறந்தது எங்கே என்று கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவிலேயே இவர்களுக்கு வாடகை தாய் மூலம் குழந்தைபிறந்ததா அல்லது வெளிநாட்டில் பிறந்ததா என்று கேள்வி எழுந்துள்ளது. இவர்களுக்கு வெளிநாட்டில் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்து இருந்தால் அது சட்டப்படி தவறாக இருக்காது. இதுதான் தற்போது இந்த விவகாரத்தில் எழுந்துள்ள பெரிய கேள்வி.

எங்கே?
இது தொடர்பாக சினிமா வட்டாரங்களில் சிலரிடம் விசாரித்தோம். அவர்கள் நம்மிடம் தெரிவித்த தகவலில், இவர்கள் இருவருமே வெளிநாட்டில் உள்ளவர்கள் மூலம்தான் குழந்தை பெற்றனர். இந்த வருட தொடக்கத்திலேயே அதற்கான பணிகளை செய்துவிட்டனர். அதனால் இது சட்டப்படி குற்றம் கிடையாது என்று தெரிவித்துள்ளனர். இவர்கள் எங்கே இந்த வாடகை தாய் முறையை பயன்படுத்தினார்கள் என்ற தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
காது கூசுது.. இவ்ளோ கேவலமாக பேசுவதா? நயன்தாரா குறித்த சிவி சண்முகம் பேச்சு! நடிகர் சங்கம் டென்ஷன் -
"நயன்தாரா வேண்டும்" சி.வி.சண்முகத்தின் பேச்சு அருவருக்கத்தக்கது! கனிமொழி, ஜோதிமணி கண்டனம் -
நயன்தாரா: சி.வி.சண்முகம், திண்டுக்கல்லார் பேச்சு வைரலாகியும் அதிமுக தலைமை ஏன் மவுனம்? என்ன நடக்கிறது -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்?












Click it and Unblock the Notifications