ஜெயலலிதாவால் செய்ய முடியாததை.. கூட்டணியே இல்லாமல் விஜய் செய்துட்டாரே.. பெரும் அரசியல் புரட்சி!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு 'அரசியல் சுனாமி' இன்று வீசியுள்ளது. ஜெயலலிதாவால் செய்ய முடியாத மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை விஜய் செய்து காட்டி உள்ளார்.
பல தசாப்தங்களாக தி.மு.க-வின் அசைக்க முடியாத எஃகு கோட்டையாகத் திகழ்ந்த சென்னை மாநகரம், இன்று ஒரு புதிய உதயத்தைச் சந்தித்துள்ளது. ஆரம்பம் முதலே தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னைத் தொகுதிகள் அனைத்திலும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) முன்னிலை பெற்று வருவது, திராவிட அரசியலின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்படைத்துள்ளது.

தற்போதைய அதிரடி நிலவரம்
வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் மிக வேகமான மாற்றங்களைக் கண்டு வருகின்றன:
தமிழக வெற்றிக் கழகம் (TVK): 100 இடங்கள்
அ.தி.மு.க (AIADMK): 71 இடங்கள்
தி.மு.க (DMK): 64 இடங்கள்
சென்னையில் நிகழ்ந்த அதிசயம்: தி.மு.க 'வாஷ் அவுட்'!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உச்சகட்ட செல்வாக்குடன் இருந்த காலத்தில்கூட, சென்னையில் தி.மு.க-வை முழுமையாகத் துடைத்தெறிய முடிந்ததில்லை. ஆனால், முதல் தேர்தலிலேயே நடிகர் விஜய் அந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். சென்னை மாநகரின் அனைத்துப் பிரதான இடங்களிலும் தி.மு.க பின்னடைவைச் சந்தித்துள்ளது ஒரு வரலாற்றுச் சுவடு. 16 தொகுதிகளிலும் திமுகவை பின்னுக்கு தள்ளி தவெக முன்னிலை வகிக்கிறது.
தி.மு.க-வின் முக்கிய முகமான அமைச்சர்கள் சேகர் பாபு, தாமோ அன்பரசன், மா. சுப்பிரமணியன் தொடங்கி எல்லோரும் த.வெ.க வேட்பாளரிடம் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின் கொளத்தூரில் பின்னடைவை சந்தித்துள்ளார் .
மயிலாப்பூர் & வேளச்சேரி: மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி போன்ற படித்தவர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் த.வெ.க முன்னிலை பெற்று தி.மு.க-விற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சரிந்த அமைச்சரவை: 36-ல் 31 பேர் பின்னடைவு!
தி.மு.க அமைச்சரவையின் பெரும்பகுதி இன்று தோல்வியின் விளிம்பில் உள்ளது. மொத்தமுள்ள 36 அமைச்சர்களில் 31 பேர் பின்னடைவில் இருப்பது, அரசுக்கு எதிரான கடும் அதிருப்தியையே காட்டுகிறது.
திருச்சி மண்டலம்: தி.மு.க-வின் வலிமையான தூணான கே.என். நேரு திருச்சி மேற்கிலும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூரிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது அக்கட்சியினரை நிலைகுலையச் செய்துள்ளது.
தெற்கு மற்றும் கொங்கு: தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களிலும் த.வெ.க அலையினால் தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள் திணறி வருகின்றனர்.
டெல்டாவில் மட்டும் மிஞ்சிய நம்பிக்கை
மாநிலம் தழுவிய பின்னடைவுக்கு மத்தியிலும், தி.மு.க-விற்கு ஓரளவாவது நம்பிக்கை தரும் இடமாக டெல்டா மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. இருப்பினும், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் த.வெ.க மற்றும் அ.தி.மு.க பெற்றுள்ள அசுர வேக முன்னிலையைத் தடுக்க இது போதுமானதாக இல்லை.
மாற்றத்தின் நாயகன் விஜய்
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் விஜய் அவர்கள் கிட்டத்தட்ட 4000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று தனது அரசியல் வருகையைத் தீர்க்கமாகப் பதிவு செய்துள்ளார். ஒரு புதிய கட்சி, ஆளுங்கட்சியின் 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்களைப் பின்னடைவைச் சந்திக்க வைத்திருப்பது இந்திய அரசியலிலேயே ஒரு அபூர்வ நிகழ்வாகும்.












Click it and Unblock the Notifications