தலைமைச் செயலகமாக இயங்கிய கோடநாடு: யாரும் தப்ப முடியாது: அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: கோடநாடு விவகாரத்தில் எந்த வித பழிவாங்கும் நோக்கமும் அரசியல் நடவடிக்கையும் கிடையாது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்பது பொதுமக்களின் எண்ணம் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
Recommended Video
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் சட்டசபைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதனிடையே, பேரவை வளாகம் வெளியே செய்தியாளர்களை சந்தித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் பேத்தி வறுமையில் வாடுவதாக சமூகவலைத் தளத்தில் தகவல் பரவியது.

தேவநேயப் பாவாணர் பேத்தி
இது முதல்வரின் பார்வைக்கு கொண்டு வந்தததால் தமிழ் ஆட்சி மொழி மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் அவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு உரிய உதவிகள் செய்வதற்கும், வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தமிழறிஞர்கள் குடும்பம்
தமிழறிஞர்களின் குடும்பம் எந்த காலத்திலும் வறுமைக்கு வரக்கூடாது என்ற நிலையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் அறிஞர்களின் குடும்பத்தில் ஏற்படும் இடர்பாடுகளை கலையும் பணிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயல்படும்.

அதிமுக வாதம்
கொடநாடு விவகாரத்தில் முரண்பாடுகளின் மொத்த உருவமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி உள்ளது. சட்டப்பேரவையில் இது தொடர்பாக வாதிடக் கூடாது என்று ஜெயக்குமார் தெரிவிக்கிறார் ஆனால் பேரவையில் இது தொடர்பான வாதத்தை முதலில் முன்னெடுத்து அதிமுகதான்.

ஜெயலலிதா தலைமைச் செயலகமாக்கிவிட்டார்
ஜெயலலிதா இருக்கும் காலத்தில் கோடநாடு பங்களாவில் ஒரு தலைமைச் செயலகமே இணங்கியுள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் நடந்த உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பழி வாங்கவில்லை
நீதிமன்றத்தின் விதியின் படியே விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் எந்தவித பழிவாங்கும் நோக்கமும் அரசியல் நடவடிக்கையும் கிடையாது. இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

ஜெயக்குமார் பேட்டி
இதனிடையே, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து எந்த காலத்திலும் சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபு இல்லை என கோடநாடு விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், எதிர்கட்சி தலைவரை பேரவையில் பேசவிடாமல், மனரீதியான துன்புறுத்தல் அளிக்க வேண்டும் என்று பேரவையில் கோடநாடு விவகாரம் பேசப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
-
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications