Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைமைச் செயலகமாக இயங்கிய கோடநாடு: யாரும் தப்ப முடியாது: அமைச்சர் தங்கம் தென்னரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடநாடு விவகாரத்தில் எந்த வித பழிவாங்கும் நோக்கமும் அரசியல் நடவடிக்கையும் கிடையாது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்பது பொதுமக்களின் எண்ணம் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Recommended Video

    தவறு செய்தவர்களுக்கு தண்டனை.. கோடநாடு வழக்கில் யாரும் தப்ப முடியாது- Minister Thangam Thennarasu

    சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் சட்டசபைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதனிடையே, பேரவை வளாகம் வெளியே செய்தியாளர்களை சந்தித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

    தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் பேத்தி வறுமையில் வாடுவதாக சமூகவலைத் தளத்தில் தகவல் பரவியது.

    தேவநேயப் பாவாணர் பேத்தி

    தேவநேயப் பாவாணர் பேத்தி

    இது முதல்வரின் பார்வைக்கு கொண்டு வந்தததால் தமிழ் ஆட்சி மொழி மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் அவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு உரிய உதவிகள் செய்வதற்கும், வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    தமிழறிஞர்கள் குடும்பம்

    தமிழறிஞர்கள் குடும்பம்

    தமிழறிஞர்களின் குடும்பம் எந்த காலத்திலும் வறுமைக்கு வரக்கூடாது என்ற நிலையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் அறிஞர்களின் குடும்பத்தில் ஏற்படும் இடர்பாடுகளை கலையும் பணிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயல்படும்.

    அதிமுக வாதம்

    அதிமுக வாதம்

    கொடநாடு விவகாரத்தில் முரண்பாடுகளின் மொத்த உருவமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி உள்ளது. சட்டப்பேரவையில் இது தொடர்பாக வாதிடக் கூடாது என்று ஜெயக்குமார் தெரிவிக்கிறார் ஆனால் பேரவையில் இது தொடர்பான வாதத்தை முதலில் முன்னெடுத்து அதிமுகதான்.

    ஜெயலலிதா தலைமைச் செயலகமாக்கிவிட்டார்

    ஜெயலலிதா தலைமைச் செயலகமாக்கிவிட்டார்

    ஜெயலலிதா இருக்கும் காலத்தில் கோடநாடு பங்களாவில் ஒரு தலைமைச் செயலகமே இணங்கியுள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் நடந்த உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    பழி வாங்கவில்லை

    பழி வாங்கவில்லை

    நீதிமன்றத்தின் விதியின் படியே விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் எந்தவித பழிவாங்கும் நோக்கமும் அரசியல் நடவடிக்கையும் கிடையாது. இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

    ஜெயக்குமார் பேட்டி

    ஜெயக்குமார் பேட்டி

    இதனிடையே, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து எந்த காலத்திலும் சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபு இல்லை என கோடநாடு விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், எதிர்கட்சி தலைவரை பேரவையில் பேசவிடாமல், மனரீதியான துன்புறுத்தல் அளிக்க வேண்டும் என்று பேரவையில் கோடநாடு விவகாரம் பேசப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+