குடியாட்சியில் முடியாட்சி நடக்குது.. உங்களுக்கு எதற்கு செங்கோல்.. விடாத சீமான்.. இப்படி சொல்லிட்டாரே
சென்னை: சோழர் காலத்தில் முடியாட்சியில் குடியாட்சி நடத்தினார்கள். இப்போது குடியாட்சியில் முடியாட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு எதற்கு செங்கோல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாட்டன் காலத்து செங்கோல் இது கிடையாது. உம்மிடி பங்காருவில் தயாரித்த செங்கோல் இது. சோழ செங்கோல் என்று சொல்லாமல் உம்மிடி செங்கோல் என்று வேண்டுமானால் சொல்லலாம். நேரு கையில் ஒரு செங்கோலை ஆதீனங்கள் கொடுத்தாங்க... விடுதலை செய்த போது கொடுத்தீர்கள்.. அப்போதும் இதையேதான்சொல்லி கொடுத்தீர்கள்.

நமது பாட்டன் இதை வைத்தா ஆட்சி செய்தார். இந்த செங்கோலை கொடுத்து தமிழருக்கு தமிழ் மொழிக்கு என்ன பெருமையை சேர்த்து விட்டீர்கள். இப்போது இந்த செங்கோலை கொண்டு போய் வைப்பதனால் என்ன வந்து விட போகிறது. சோழர் காலத்தில் முடியாட்சியில் குடியாட்சி நடத்தினார்கள். இப்போது குடியாட்சியில் முடியாட்சியை நடத்தி கொண்டு இருக்கிறீர்கள்.
உங்களுக்கு எதற்கு செங்கோல். உங்களுக்கு கவனம் தமிழகத்தில் எப்படியாவது அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான். அதற்கு தமிழ் மொழிதான் உலகில் மூத்தமொழி என்று சொல்கிறார்கள். தேவாரம் பாடி செங்கோலை கொடுத்தார்கள் என்று சொல்கிறீர்கள் நான் அதை மதிக்கிறேன். கோவிலில் ஒரு முறை தேவாரத்தை பாட சொல்லுங்களேன் பார்க்கலாம்.
இதையெல்லாம் கேட்டுவிட்டு சிரித்து விட்டு ரசித்து விட்டு போய்க் கொண்டு இருக்க வேண்டியதுதான். கோழிக்கு இரை போடும் போது அதன் மொழியில் பேசி அழைப்பார்கள்.. பின்னர் சட்டியில் கொதிக்க வைத்துவிடுவார்கள். அதேபோலத்தான் திருக்குறள், பாரதியார் பாட்டு சொல்வதை எல்லாம் கேட்டு மயங்கி விடக் கூடாது. விழிப்புணர்வோடு இருக்கணும் என்பதுதான் பொருள்.
சின்ன சின்ன நாடுகளில் கூட பல மொழிகள் ஆட்சி மொழியாக உள்ளது. உலகத்தின் மூத்த மொழி என்று சொல்கிறீர்கள். இந்திய மொழிகளில் தொன்மையை தமிழில் இருந்து அறியலாம் என்கிறீர்கள். அந்த மொழியை ஏன் ஆட்சி மொழியாக ஏன் தரவில்லை. பயிற்று மொழியாக தரவில்லை. தேர்தல் வரும் போது விழுந்து விழுந்து பேசுகிறீர்கள்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரணாப் முகர்ஜி என்றால் விட்டு விட்டு திறப்பீர்களா.. ராம் நாத் கோவிந்த் இருந்தாலும் இதேதான் நடந்து இருக்கும். நாங்கள் தீண்டத்தகாதவர்கள். மோடியும் திறக்கக் கூடாது.. சங்கராச்சாரியார் திறக்க வேண்டும் என்று குருமூர்த்தி சொல்கிறார். அது கொஞ்சம் பெரிய மடம் அவ்வளவுதான்.

நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது சரியான முடிவுதான். மக்களாட்சியின் தலைவரே இல்லாமல் மக்களவையை திறப்பது என்பது ஒரு அவமதிப்புதான். அது யாராக இருந்தால் என்ன... அவமதிப்பு ஏற்படும் போது எல்லா கட்சிகளும் குரல் கொடுக்கின்றன. அதை நான் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல -
பாஜக உறவை முறிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்.. ஜோஸ் மார்ட்டினால் வந்த சிக்கல்! விஜய்யுடன் சேரும் ரங்கசாமி? -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார் -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications