ஆளுங்கட்சி அடாவடி.. தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து பாஜக ஓரவஞ்சனை - கொந்தளித்த திருமாவளவன்
சென்னை: நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஆளும் கட்சியினர் மிகவும் அடவடித் தனமாக நடந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவரையே பேச அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான சூழல் அமைந்தால் தமிழ்நாட்டுக்காக நிதி ஒதுக்காத நிலை குறித்து தமிழ்நாட்டு உறுப்பினர்களின் தரப்பில் இருந்து கேள்வி, உரிமைக் குரல் எழுப்புவோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தை கட்சிகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளதாவது: இந்த கூட்டத்தொடரில் ஆளும் கட்சியினர் மிகவும் அடாவடித் தனமாக நடந்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரையே பேச அனுமதிக்கவில்லை. நூல்களில் இருந்தும் இதழ்களில் இருந்தும் மேற்கோள் காட்டிப் பேசுவது இயல்பான ஒன்றுதான்.

தமிழ்நாட்டிற்கான நிதி
ஆனால், ராகுல் காந்தி பேசும்போது வெளியிடப்படாத ஒரு நூலிலிருந்து பேசக்கூடாது என்கிற ஒரு காரணத்தைக் காட்டி அவரை முற்றாக பேச விடாமல் தடுத்து நிறுத்தி, அதன் மூலம் கூட்டத் தொடரையே கடந்த வாரம் நடத்தவில்லை. இந்த வாரமும் அப்படித்தான் இருக்கும் என்று கருதுகிறோம். பேசுவதற்கான சூழல் அமைந்தால் தமிழ்நாட்டுக்காக நிதி ஒதுக்காத நிலை குறித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரப்பில் இருந்து கேள்வி, உரிமைக் குரல் எழுப்புவோம்.
பாஜகவின் ஓரவஞ்சனை
நமக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதியையே கல்வி உள்ளிட்ட பல தொகையை அவர்கள் ஒதுக்கவில்லை. ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் மாநிலம் வாரியாக கணிசமான ஒதுக்கீடு செய்கிறபோது தமிழ்நாட்டுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை காட்டுகின்றனர். பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளுகிற மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் திட்டமிட்டே நிதி ஒதுக்கீடு செய்யாமல் அதைப் புறக்கணித்து வருகின்றனர்.
தமிழ்நாடும் அதில் ஒன்று. தமிழ்நாடு மட்டுமல்லாமல் மேற்குவங்கம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இதே ஓரவஞ்சனையான அணுகுமுறையைத் தான் பாஜக அரசு கையாண்டு வருகிறது என்று கூறினார்.
-
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026












Click it and Unblock the Notifications