3வது அணியா.. தமிழ்நாட்டில் எப்போதுமே இருதுருவ போட்டிதான்.. அடித்து சொன்ன திருமாவளவன்

3வது அணி அமைந்தாலும், இருதுருவ போட்டிதான் நடக்கும் என திருமா கூறினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 3-வது அணி உருவானாலும் தமிழ்நாட்டில் எப்போதுமே இருதுருவ போட்டிதான் இருக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:

Thirumavalavan says about 3rd front alliance

"தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை... பாஜகவின் தலையீடு நிறைய இருக்கிறது.. இதை அவர்கள் தேர்தலை அறிவித்ததில் இருந்தே அறியமுடிகிறது. மேற்குவங்கத்தில் தமிழகத்தை விட 60 சட்டசபை தொகுதிகள் தான் அதிகம்... ஆனால் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்த போகிறார்கள்.

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு என்பது தேர்தலுக்கு நடத்தப்பட்ட நாடகமாகத்தான் தெரிகிறது... ஏனென்றால், இந்த சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் ஆளுநர் ஒப்புதல் அளித்தபிறகுதான் சட்டமாகும்.. இனி ஆளுநர் கையெழுத்திடுவாரா என்பது தெரியவில்லை இதேபோல கடன் தள்ளுபடி அறிவிப்பும், தேர்தல் நாடகமாகவே தான் இருக்கிறது..

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஒவ்வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதை ஆதாரபூர்வமாக நம்மால் அறிய முடியும்... அதற்காகத்தான் அந்த கணக்கெடுப்பை வலியுறுத்துகிறோம்.

3வது அணி அமைவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.. ஒவ்வொரு தேர்தலிலும் 3-வது அணி உருவாகத்தான் செய்யும்.. ஆனால் எப்போதுமே இருதுருவ போட்டிதான் இருக்கும்... அதுபோலதான் இந்த முறையும்.." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+