"பெரிய சத்தம் கேட்டுச்சி.. எட்டிப் பார்த்தா" ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்தவரின் பயங்கர அனுபவம்
சென்னை: குன்னூர் அருகே இன்று முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்டோர் பயணம் செய்த விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசி ஒருவர் தனது பயங்கர அனுபவத்தை நிருபர்களிடம் விவரித்துள்ளார்.
Recommended Video
Mi-17V5 என்ற வகையை சேர்ந்த இந்த ஹெலிகாப்டர், சூலூரிலிருந்து வெலிங்டனுக்கு முற்பகல், 11.47 மணிக்கு புறப்பட்டுள்ளது.
இது 12.20 மணிக்கு குன்னூர் அருகேயுள்ள, காட்டேரி என்ற வனப் பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது.
இதையடுத்து, சுமார் இரண்டு மணி நேரம் அங்கே தீப்பிடித்து எரிந்த நிலையில் அதில் பயணித்தவர்கள் பலரது உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன.

13 பேர் பலி என தகவல்
சம்பவ இடத்தில் 4 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது. இதன் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மற்றும் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்தோர் ஆகியோரையும் சேர்த்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 13 என்ற அளவுக்குச் சென்றுள்ளது.

பிபின் ராவத் பயணம்
முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோர் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர் அவர்களைப்பற்றி ராணுவ தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் விபத்து சம்பவத்தை நேரில் பார்த்த நஞ்சாபுரா சர்க்கிள் பகுதியிலுள்ள, கிருஷ்ணசாமி என்பவர் அந்த அனுபவத்தை நிருபர்களிடம் தெரிவித்தார்.

மரத்தில் மோதியது
அவர் கூறுகையில்: ஹெலிகாப்டர் வந்தபோது திடீரென பெரிய சத்தம் கேட்டது. அந்த சத்தம் வந்தபோது நான் எட்டி பார்த்தேன். அது கீழே உள்ள மரத்தில் மோதியது. மோதும்போது அது சுற்றிலும் நெருப்பு காணப்பட்டது. அங்குள்ள ஒரு பெரிய மரத்தில் அந்த ஹெலிகாப்டர் மோதியது. பிறகு அந்த இடத்திலிருந்து பெரும் புகை கிளம்பியது.

பயந்து போன உள்ளூர்வாசி
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், பக்கத்து வீட்டுப் பையனை கூப்பிட்டேன். அவர் ஓடி வந்து பார்த்து, போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் சொன்னார். நான் பார்க்கும் போது ஹெலிகாப்டரில் இருந்த ஒருவர் எரிந்தபடி அப்படியே சாய்ந்தார். மற்றவர்கள் ஹெலிகாப்டர் கீழே விழும்போது பொத், பொத்தென்று கீழே விழுந்தார்கள். உடலில் தீ பிடித்து எரிந்த நிலையில் அவர்கள் அப்படியே கீழே விழுந்ததை பார்த்தேன். அதற்கு மேலும் அதை என்னால் பார்க்க முடியவில்லை. பயத்தில் ஓடி வந்துவிட்டேன். இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications