Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கீரிப்பிள்ளைகளை வேட்டையாடி இப்படி பண்றாங்களா? வனத்துறை அதிரடி ஆக்‌ஷன்! சுப்ரியா சாஹு வெளியிட்ட தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியம் வரையும் பிரஷ்கள் தயாரிப்பதற்காக கீரிப்பிள்ளைகள் கொல்லப்படுவதாகவும், இதைத் தடுக்கும் வகையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரஷ்களை பறிமுதல் செய்து, விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் பாம்பே பயந்து நடுங்கும் உயிரினம் என்றால் அது கீரிப்பிள்ளை. கீரிப்பிள்ளை புயல் வேகத்தில் தலையைப் பற்றிப் பிடித்து பாம்புக்கு தண்ணி காட்டிவிடும். கீரிக்கும் பாம்புக்கும் சண்டை ஏற்பட்டால் கீரியே ஜெயிக்கும். அப்படிப்பட்ட கீரிப்பிள்ளைகள் ஓவியம் வரையப் பயன்படுத்தப்படும் பிரஷ்களுக்காக வேட்டையாடப்படுகின்றனவாம்.

Thousands of mongoose killed for making painting brushes: Supriya sahu ias post

இது தொடர்பாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி கீரிகளை கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஓவியம் வரைய பயன்படுத்தப்படும் பிரஷ்கள் தயாரிக்க கீரிப்பிள்ளையின் முடிகள் பயன்படுத்தப்படுவதால் கீரிப்பிள்ளைகள் பெருமளவில் கொல்லப்படுகின்றன.

ஒரு கிலோ கீரி முடியை சேகரிக்க கிட்டத்தட்ட 50 கீரிப்பிள்ளைகள் கொல்லப்படுகின்றன. சட்டவிரோதமாக வன உயிரினங்கள் மற்றும் வன உயிரினப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு தொடங்கப்பட்டது.

Thousands of mongoose killed for making painting brushes: Supriya sahu ias post

இந்த பிரிவினர் கோவை மண்டலத்தில் இருந்து கீரி முடியால் தயாரிக்கப்பட்ட 3200 பெயிண்ட் பிரஷ்களையும், சென்னை மண்டலத்தில் இருந்து 7800 பிரஷ்களையும், மதுரை மண்டலத்தில் இருந்து 3000 பிரஷ்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தெரிந்தே வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓவியர்கள் சிந்தெடிக் பிரஷ்களை பயன்படுத்த வேண்டும். கீரிப்பிள்ளைகள் கொல்லப்படுவதை தவிர்க்க விழிப்புணர்வு இயக்கத்தை ஏற்படுத்தவுள்ளோம். வன உயிரிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த சட்டவிரோத வர்த்தம் நிறுத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவினருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+