எழுவர் விடுதலை விவகாரம்.. பேரறிவாளன் வழக்கு முதல் ஆளுநர் நிராகரிப்பு வரை.. நடந்தது என்ன ?
சென்னை: எழுவர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு தீர்மானம் இயற்றியது முதல் ஆளுநர் நிராகரிப்பு வரை வழக்கு கடந்து வந்த பாதை என்ன?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். அவர்களது தண்டனை காலம் முடிவடைந்தும் அவர்களை விடுவிக்காததால் தமிழக அரசியல் கட்சிகள் எழுவர் விடுதலை குறித்து பேசி வந்தார்கள்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கு வரும் 7 பேரை விடுதலை செய்வது குறித்து 161 ஆவது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்கலாம் என கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அன்றைய தினம் மாலையே தமிழக அமைச்சரவை சிறப்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. அதே ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி 7 பேர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து எழுவர் விடுதலை குறித்த தீர்மானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் தமிழக அரசு ஒப்படைத்தது.
2019-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
நவம்பர் 3, 2020- தனக்கான தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெற்றது.
ஜனவரி 21-ஆம் தேதி பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை குறித்து 3 நாட்களில் முடிவெடுப்பார் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்தது.
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர்
ஜனவரி 29-ஆம் தேதிக்குள் எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஜனவரி 30-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுவர் விடுதலை குறித்து பரிந்துரை கடிதம் அளித்திருந்தார்.
பிப்ரவரி 4- எழுவர் விடுதலை விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது. ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நம்பிக்கை தெரிவித்தார்.
பிப்ரவரி 4- எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கில்லை என்றும் குடியரசுத் தலைவருக்கே உள்ளது என்றும் தமிழக சட்டசபை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்துள்ளார்.
பிப்ரவரி 9-ஆம் தேதி - பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் விசாரணையில் ஆளுநர் முடிவு குறித்து உச்சநீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தெரியவரும்.