சென்னையன்ஸ்க்கு குட்நியூஸ்..காய்கறிக்கு கோயம்பேடுக்கு அலைய வேண்டாம்! வேளான் பட்ஜெட்டில் செம அறிவிப்பு
சென்னை: 2025 -2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் சென்னையில் பொது மக்களுக்கு காய்கறி தேவையை பூர்த்தி செய்ய 1200 ஏக்கரில் பந்தல் காய்கறி பரப்பு அமைக்கப்படும் எனவும், ஒன்பது லட்சம் குடும்பங்களுக்கு ஆறு காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 75 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
2025 2026ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தர் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். காலை ஒன்பதரை மணிக்கு அவர் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவரது பட்ஜெட் உரை இருந்தது.

கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து வேளாண் துறைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஐந்தாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
அவரது பட்ஜெட் உரையில்,"இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ.12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும். சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், 1 லட்சம் ஏக்கரில், ரூ.12 கோடியில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும்.
ரூ.15 கோடியில், 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு செயல்படுத்தப்படும் வேளாண் தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கரும்புக்கான ஊக்கத் தொகை, ரூ.215ல் இருந்து ரூ.349 ஆக உயர்த்தப்படும். கரும்பு டன் ஒன்றுக்கு 3500 வழங்கப்படும். இதற்காக ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து சென்னையில் காய்கறி தேவை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சென்னைக்கு அருகே 1200 ஏக்கரில் பந்தல் காய்கறி பரப்பு அமைக்கப்படும் எனவும், மேலும் கத்தரிக்காய் வெண்டைக்காய் தக்காளி உள்ளிட்ட ஆறு காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 75 சதவீத மானியத்துடன் ஒன்பது லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications