சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் பக்தி பெருக்கோடு தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதேபோல் துலாப்பள்ளியில் உள்ள அன்னதான முகாமுக்கும் அண்ணாமலை சென்றார். இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை, தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். குற்றவாளிகளுக்கு பாஜகவில் இடமில்லை; கடினமாக உழைத்தால் அடிமட்ட தொண்டருக்கும் பதவி என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை
இதற்கு முன் இருந்த பாஜக தலைவர்களை போல் அல்லாமல் பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசை நேரடியாக குற்றம்சாட்டி வருகிறார் அண்ணாமலை. இதேபோல் சென்னை மழை, வெள்ள காலத்திலும் நேரடியாக களமிறங்கி பணிகளை மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சி அதிமுகவா? பாஜகவா? என்னும் கேள்வி எழுப்பும் அளவுக்கு அண்ணாமலையின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

இரு முடி கட்டி சாமி தரிசனம்
இந்த நிலையில்தான் கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். கருப்பு கலர் வேஷ்டி அணிந்து, இரு முடி கட்டி சபரிமலை ஐயப்பனை தரிசித்துள்ளார் அண்ணாமலை. மாஸ்க் அணிந்தபடி கையில் பையிடனும், தலையில் இருமுடியுடனும் அண்ணாமலை தரிசனத்துக்கு செல்லும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அன்னதான முகாமுக்கு சென்றார்
அண்ணாமலை சிறப்பு தரிசனம் மூலம் ஐயப்பனை வழிபட்டுள்ளார். சாமி தரிசனத்தை முடித்த அண்ணாமலை திரும்பும் வழியில் துலாப்பள்ளியில் உள்ள அன்னதான முகாமுக்கு சென்றார். அவர் அங்கு குருசாமிக்கு வணக்கம் செலுத்தும் காட்சிகளும், அங்குள்ளவர்களிடம் போட்டோ எடுத்துக் கொண்ட காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video

இனி நல்லதே நடக்கும்
அண்ணாமலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். ''சுவாமியே ஐயப்பா'' ''இனி நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும்'' ஐயப்பன் உங்களுக்கு நல்லதே செய்வார்'' என்று பாசிட்டிவ் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications