Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tamil Nadu Class 12 Result 2025: பிளஸ் 2 மார்க் ஷீட்டை Digilocker-ல் டவுன்லோடு செய்வது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் Digilocker மூலம் மதிப்பெண் சான்றிதழை டவுன்லோடு செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர்.

tamil nadu class 12 result 2025 12 2025

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வு முடிவுகளை tnresults.nic.in or dge.tn.gov.in. ஆகிய வெப்சைட்டுகளில் செக் செய்ய வேண்டும். அதில் "TN HSE +2 Result 2025" அல்லது "TN SSLC Result 2025" என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது ஒரு பேஜ் ஓபனாகும், அதில் தேர்வு எண்ணையும் உங்கள் பிறந்த தேதியையும் கொடுக்க வேண்டும். பிறகு உங்கள் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் வெளியாகும்.

ஒரே நேரத்தில் மாணவர்கள் அனைவரும் மேற்கண்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிய ஆர்வம் காட்டுவர். இதனால் சர்வம் முடங்க வாய்ப்பிருக்கிறது. இதை தவிர்க்க வேகமான முடிவுகளை DigiLocker மூலமும் அறியலாம்.

முதலில் https://results.digilocker.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு Tamil Nadu State Board 12th Result 2025 என இடம்பெற்றிருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து மாணவர்களின் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியானதும் digilocker மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதற்கு அதில் மொபைல் எண் கொண்டு பதிவு செய்ய வேண்டும். மொபைலில் டிஜிலாக்கர் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

அதில் Get Started என இருப்பதை கிளிக் செய்து புதிய கணக்கை Create Account தொடங்க வேண்டும். மொபைல் எண் அல்லது இமெயில் முகவரி கொண்டு ஓடிபி எண் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆதார் எண்ணை கொண்டு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். அதில் Tamil Nadu Marksheet என தேடி, அதில் பதிவு எண் , தேர்வு எழுதிய மாதம், ஆண்டு கொடுத்தால் மதிப்பெண் சான்றிதழ்கள் வந்துவிடும். அப்படியே டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் அரியலூர் முதலிடம் பெற்றுள்ளது. அரியலூரில் 98.82 சதவீதம் பேரும் ஈரோட்டில் 97.98 சதவீதம் பேரும், திருப்பூரில் 97.53 சதவீதம் பேரும் கோவையில் 97.48 சதவீதம் பேரும் கன்னியாகுமரியில் 97.01 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 7,92,494 மாணவர்களின் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: ரிசல்ட் எதுவாக இருந்தாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.

தேர்ச்சி பெறாதவர்களுக்கும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கும் காலம் இன்னும் பல வாய்ப்புகளை வழங்கத்தான் போகிறது. இது வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான Phase அமைய போகிறது. positive outlookடன் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்.

பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணை நில்லுங்கள் என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+