இதை கவனிச்சீங்களா.. ஒரே நாள்.. ஒரே மருத்துவமனை.. வீடு திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி-துரைமுருகன்
Recommended Video
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் ஒரே நாளில்(புதன்கிழமை) அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவரும் இரண்டு நாள் சிகிச்சை பெற்றநிலையில் நேற்று ஒரே நாளில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர்.
தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இது குறித்து நேற்று முதினம் மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் முறையில் விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புதன்கிழமை காலை 7 மணிக்கு சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து உடனடியாக வீடு திரும்பினார்.
இந்நிலையில் 2வது நாளாக நேற்று காலை 6.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் முடிந்து இரண்டு மணி நேரத்தில் வீடுதிரும்பினார் அவருக்கு பல்வலி இருந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் தான் காய்ச்சல் மற்றும் சிறுநீரகத் தொற்று உளிளட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று முன்தினம் (புதன்கிழமை) காலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வியாழக்கிழமை காலை அவரை டிஸ்சார்ஜ் செய்தனர்.
முதல்வர் பழனிச்சாமி மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகிய தலைவர்கள் ஒரே நாளில் ஒரே மருத்துவனையில் (அப்போலோ மருத்துவமனையில்) அனுமதிக்கப்பட்டு, ஒரே நாளில் சிகிச்சை முடிந்தது, ஒரே நாளில் நலமுடன் திரும்பியுள்ளனர்.