முதல்வர் எடப்பாடியின் சுதந்திரதின பேச்சை சாதாரணமாக கடந்து போனீங்களா.. கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாருங்க
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நேற்றைய சுதந்திர தின உரையை சாதாரணமாகக் கடந்து சென்று இருந்தால், கொஞ்சம் ரீவைண்ட பண்ணி பாருங்கள். ஏனெனில் அந்த உரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசை மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
நாட்டின் 73 வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நேற்று கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுதந்திர தின உரையில் வேலூர் மாவட்டத்தை மூன்று மாவட்டமாக பிரித்து அறிவித்தார். இன்னும் இரண்டு முக்கியமான விஷயங்களை அவர் பேசினார்.

முதல்வரின் சுதந்திர தின உரை
இருமொழி கொள்கையில் உறுதியாக இருப்பதாக கூறிய முதல்வர், தமிழகத்தில் இந்தியை திணிக்க அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். அத்துடன் மக்கள் நலனுக்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும் எதிர்ப்பு தெரிவித்து மக்களை பாதுகாப்பதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் இருக்கும் என்றும் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எச்சரிக்கை
இந்தி மொழியை தமிழகத்தில் மூன்றாவது மொழியாக கொண்டு வர மத்திய அரசு விரும்பும் நிலையில், இரண்டு மொழி தான் இங்கு என்று எடப்பாடி உறுதியான முறையில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அத்துடன் இந்தியை தமிழகத்தில் திணிக்க அனுமதிக்க முடியாது என்பதை கூறி மறைமுகமாக தனது உரையின் மூலம் மத்திய அரசை எச்சரிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு எதிர்க்கும்
இத்துடன் மக்கள் நலனுக்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும் எதிர்ப்பு தெரிவித்து மக்களை பாதுகாப்பதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் இருக்கும் என்று முதல்வர் பழனிச்சாமி கூறியதில் ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. மாநிலத்தில் திட்டங்களை மத்திய அரசு கொண்டுவரும்போது அது மக்கள் நலனுக்கு எதிராக இருந்தால் அதை ஏற்க மாட்டோம் என்றும் அத்திட்டத்தை நிச்சயம் தமிழக அரசு எதிர்க்கும் என்பதை தெளிவாக முதல்வர் கூறியுள்ளார். இதையும் மத்திய அரசுக்கு முதல்வர் விடுத்த எச்சரிக்கையாக பார்க்க வேண்டியுள்ளது.

எடப்பாடி கடும் பதிலடி
அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், தமிழக அரசை கலைத்தாலோ அல்லது மாநிலத்தை பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்தாலும் ஆளும் அதிமுக எதிர்க்காமல் அமைதியாக இருக்கும் என்று பேசியிருந்தார். இதற்கு முதல்வர் கடுமையாக பதிலடி கொடுத்தார். அடுத்த நாளிலேயே முதல்வர் பழனிச்சாமி தமிழகத்துக்கு எதிரான எதையும் எதிர்ப்போம் என்பதை சுதந்திர தின உரையில் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications