செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில்.. உடனே பணி தொடங்கிடுக.. ஸ்டாலின் கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செயல்படாமல் இருக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் பணிகளை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருமணி கிராமத்தில் உள்ள எச்.எல்.எல்.பயோடெக்கின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

TN CM MK Stalin has urged the centre to start work on the inactive Chengalpattu vaccine manufacturing company

இந்த தடுப்பூசி பூங்கா சுமார் ரூ. 600 கோடி செலவில் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை செயல்படாமல் முடங்கியுள்ளது. இங்கு 585 மில்லியன் டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்ய வேண்டும்.செயல்படாமல் இருக்கும் இந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

இங்கு தடுப்பூசியை உறபத்தியை மீண்டும் தொடங்கலாமா? எத்தனை தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும்? இதற்கான பணிகள் தொடங்குவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார்.

பின்னர் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ' செங்கல்பட்டு #HLLbiotech நிறுவனத்தின் #Vaccine ஆய்வகத்தை நேரில் ஆய்வு செய்து உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கிடும் முயற்சிகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டேன். தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும். மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+