பனையூரில் 60 நிர்வாகிகளுக்கு டேட்டாவுடன் கவர் கொடுத்த தவெக.. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்?
சென்னை: பனையூர் அலுவலகத்தில் தவெகவின் 60 நிர்வாகிகளிடம் அக்கட்சியின் தலைவர் விஜய் நேர்காணல் நடத்தி இருக்கிறார். இந்த நேர்காணலுக்கு பின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்திருக்கிறார். இந்த நேர்காணலில் நடந்தது என்பது தொடர்பாக கொஞ்சம் விவரமாக விசாரித்தோம். அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தவெக சார்பாக விருப்ப மனு பெற்றவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கான நேர்காணல் நேற்று பனையூரில் தொடங்கியது. ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளருக்கு இருக்கும் செல்வாக்கு, பணம், சமூக அடிப்படையில் நேர்காணலுக்கு பலரும் அழைக்கப்பட்டுள்ளனர். முதலில் சீனியரான செங்கோட்டையன் உள்ளிட்டோரிடம் தனியாக பேசியுள்ளார்.

பின்னர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், மரியா வில்சன் உள்ளிட்டோரை அழைத்து பேசிவிட்டு உங்களின் தொகுதிகளில் செய்யும் பணிகளை தொடருமாறு வாழ்த்தி அனுப்பி இருக்கிறார். இதன்பின் மண்டல வாரியாக 5 பேராக விஜய் முன் சென்று அமர்ந்துள்ளனர். அவர்களுடன் சில நிமிடங்கள் உரையாடிய விஜய், தேர்தலுக்கு பின் உங்களை எம்எல்ஏ-வாக பார்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
அதேபோல் உங்களுக்காகவே அனைத்தையும் விட்டுவிட்டு வந்துள்ளேன்.. இந்த பயணத்தில் என்ன பிரச்சனைகள் வந்தாலும் சேர்ந்தே சமாளிப்போம்.. நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளை செய்யுங்கள் என்று தட்டிக் கொடுத்துள்ளார். மொத்தமாக விஜய் 60 பேரை நேர்காணல் செய்திருக்கிறார். இவர்களில் பெரும்பாலானோர் மாவட்டச் செயலார்கள் தான்.
இதனால் சீட் உறுதி என்பதால் ஸ்வீப் பாக்ஸ் உடனே பனையூர் வந்துள்ளனர். அதேபோல் விஜய்யை சந்தித்துவிட்டு வெளியில் வரும் போது, ஜான் ஆரோக்கியசாமி நிர்வாகிகள் தரப்பில் ஒரு பை கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த தொகுதிகளின் பெயரில் இருந்த பைகளில், அந்தந்த தொகுதிகளின் நிலவரங்கள், பூத் கமிட்டியின் வலிமை, அடுத்த 30 நாட்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
இதன்படி வேளச்சேரியில் தாமு, ஆர்கே நகர் தொகுதியில் மரியா வில்சன், சேலம் தெற்கு பார்த்திபன், திருச்செங்கோடு அருண்ராஜ், ஸ்ரீரங்கம் குப கிருஷ்ணன், காரைக்குடி பிரபு, கொளத்தூர் விஎஸ் பாபு, மதுரை மேற்கு கல்லாணை, திருப்பரங்குன்றம் சிடிஆர் நிர்மல்குமார், வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா, விருகம்பாக்கம் சபரிநாதன், கோவை வடக்கு சம்பத் குமார் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
கோபிச்செட்டிப்பாளையம் செங்கோட்டையன், ஈரோட்டின் ஒரு தொகுதியில் சத்யபாமா உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர். அதேபோல் திருச்சி கிழக்கு தொகுதி தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. விஜய் போட்டியிடும் தொகுதியை கடைசி நேரத்தில் அறிவிக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் திருச்சி கிழக்கு மட்டுமல்லாமல் மற்றொரு தொகுதியிலும் விஜய் போட்டியிடக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
-
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
போளூர் தொகுதியை விட்டுக் கொடுத்தாரா அக்ரி கிருஷ்ணமூர்த்தி? மகனுக்காக இறங்கிய அமைச்சர் எவ வேலு! -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications