ஆண்டாள் கோவில் கோபுரத்தையும் ஆளுநர் மதிக்கல.. பாஜக என்ன செய்யப்போகுதோ? சீண்டிய பத்திரிகையாளர்!
சென்னை : தேசியத்தையும் அவமதித்து, ஆண்டாள் கோபுரத்தையும் புறக்கணிப்பதுதான் ஆளுநருக்கு அழகா? தமிழ்நாடு அரசின் முத்திரையை பயன்படுத்தாமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தையே கவர்னர் தூக்கி எறிந்திருக்கிறாரே? பாஜகவினர் என்ன செய்யப்போகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பத்திரிகையாளர் குபேந்திரன்.
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையும், தமிழ்நாடு அரசின் இலச்சினையும் தவிர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்ததும், தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

ஆளுநர் சர்ச்சை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்றைய நிகழ்வில் அரசு கொடுத்திருந்த ஆளுநர் உரையில் சில பகுதிகளை ஆளுநர் ரவி வாசிக்காமல் தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் வாசித்த உரையை அவைக்குறிப்பில் ஏற்றக் கூடாது என தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் உடனடியாக அவையில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அழைப்பிதழில் தமிழகம்
இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் முன்பே இன்னொரு சர்ச்சை எழுந்துள்ளது. வரும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, பொங்கல் விழா அழைப்பிதழை தயார் செய்து வழங்கி வருகிறது. அழைப்பிதழில் கடந்த ஆண்டு ஏப்ரலில் ஆளுநர் மாளிகை அளித்த தேநீர் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு இலச்சினை இருந்த நிலையில் இந்த ஆண்டு இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. மேலும், தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இலட்சினை இல்லை
தமிழ்நாடு அரசின் இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த ஆளுநர் விரும்பவில்லை எனத் தெரிகிறது. சில நாட்களுக்கு முன்னர், தமிழ்நாடு என்பதற்குப் பதிலாக தமிழகம் எனச் சொல்வதே சரியானது என ஆளுநர் ரவி பேசி இருந்தார். அதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இலச்சினைக்கு பதில் இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாடு அரசின் சின்னம்
தமிழ்நாடு என்ற சொல் இருப்பதால், தமிழ்நாடு அரசின் சின்னத்தையே ஆளுநர் ரவி பயன்படுத்தாமல் தவிர்த்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநருக்கு ஆதரவாக நின்று திமுக அரசை விமர்சித்து வருகின்றனர் பாஜகவினர். தமிழ்நாடு அரசின் முத்திரையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் இடம்பெற்றிருக்கும். ஆளுநர் ரவி அதனையே தவிர்த்திருக்கிறாரே? ஆண்டாள் கோவில் தொடர்பான முந்தைய சர்ச்சைகளில் திரண்டு வந்த பாஜகவினர் இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆண்டாள் கோவில்
இந்நிலையில் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பத்திரிகையாளர் குபேந்திரன்,
"நேற்று : தேசிய கீதம் அவமதிப்பு !
இன்று : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுர அவமதிப்பு !
தேசியத்தையும் அவமதித்து, ஆண்டாள் கோபுரத்தையும் புறக்கணிப்பதுதான் கவர்னருக்கு அழகா?
சட்டமன்றத்தில் கவர்னர் வெளியேறும் போது, அமைச்சர் பொன்முடி அவமதித்துவிட்டார் என்று பாஜகவினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
தமிழ்நாடு அரசின் முத்திரையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தையே கவர்னர் தூக்கி எறிந்திருக்கிறாரே? என்ன செய்யப்போகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications