Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாறிய ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்... டெண்டர் விட்ட தமிழக அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு விழாக்களுக்கு செல்ல பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டர் ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாற்றப்பட்டுள்ள நிலையில் அதனை பராமரிக்க டெண்டர் விட்டிருக்கிறது தமிழக அரசு.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு பிரசாரம், அரசு விழாக்களில் பங்கேற்கும் பயணங்களுக்காக பெல் 412 EP ஹெலிகாப்டரை வாங்கினார். இது 2 எஞ்சின்களை கொண்டது. இதில் 11 பேர் பயணம் செய்யலாம்.

ஜெயலலிதா ஹெலிகாப்டர்

ஜெயலலிதா ஹெலிகாப்டர்

2016 சட்டசபை தேர்தலின் போது இந்த ஹெலிகாப்டரில் சென்றுதான் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. இதற்காக அப்போது தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதியும் பெறப்பட்டது. ஹெலிகாப்டருக்கே ஜெயலலிதா என பெயர் வைத்தாலும் வைப்பார்கள் எனவும் தேர்தல் களத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பயணங்களை விமர்சித்தும் பேசியிருந்தார்.

முதல் டெண்டர்

முதல் டெண்டர்

இந்த ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது முதல் மிகக் குறைந்த நாட்கள்தான் பயன்படுத்தப்பட்டது. நீண்ட காலமாக இதனை பயன்படுத்தவில்லை. கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியாக பயன்படுத்தப்பட்டது இந்த ஹெலிகாப்டர். இந்த நிலையில் ஹெலிகாப்டர் பழுதடைந்தது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஹெலிகாப்டரை ஏலத்திற்கு விட முடிவெடுத்தது தமிழக அரசு. அதற்கான பொறுப்பு மாநில வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏலம் போகவில்லை

ஏலம் போகவில்லை

ஹெலிகாப்டர் ஏலத்திற்கான அடிப்படை விலை ரூ.35 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டது. ஆனால் அப்போது ஹெலிகாப்டரை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. லோக்சபா தேர்தல் காலத்திலாவது ஹெலிகாப்டர் ஏலத்துக்கு போகும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போதும் ஏலம் போகவில்லை.

மீண்டும் டெண்டர்

மீண்டும் டெண்டர்

இதனால் சென்னை விமான நிலையத்திலேயே இந்த ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் இந்த ஹெலிகாப்டரை ஏர் ஆம்புலன்ஸாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாகவும் அண்மையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த ஹெலிகாப்டரை பராமரிக்க மீண்டும் டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு. டெண்டர் விண்ணப்பங்களை வழங்க ஜனவரி 6-ந் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் நாளேடுகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+