முதியவர்கள் ரேசன் கடைக்கு செல்லாமலேயே.. அத்தியாவசிய பொருட்களை வாங்குவது எப்படி? முக்கிய அறிவிப்பு
சென்னை: முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ரேசன் கடைகளுக்கு தங்களுக்கு வேண்டியவர்களை அனுப்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பமும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரேசன் அட்டையிலுள்ள குடும்பத் தலைவர் அல்லது உறுப்பினரின் கைரேகை பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடிவதால் பெரியளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இருப்பினும், அவ்வப்போது ரேசன் கடைகளில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும், முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ரேசன் கடைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்கள் ரேசன் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு இருந்தனர்.
ரேசன் கடைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளவர்கள் ரேசன் கடைகளுக்கு தங்களுக்கு வேண்டியவர்களை அனுப்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதற்கான விண்ணப்பத்தை ரேசன் அட்டைதாரர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளில் வழங்க வேண்டும். அதைச் சரிபார்த்த பிறகு அந்த நபரிடம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். இந்த விண்ணப்பங்கள் தாமதமின்றி சரிபார்த்து, விரைவாக ஒப்புதல் தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அங்கீகார படிவத்தை உணவு வழங்கல் துறையின் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications