பேருந்து வசதியின்றி அவதிப்படும் அரசு ஊழியர்கள்... கூடுதலாக பேருந்துகள் இயக்கக் கோரிக்கை
சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று அரசு அலுவலகங்கள் இயங்கத் தொடங்கிய நிலையில், பணிக்கு செல்ல போதிய பேருந்து வசதியில்லாமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவிய அளவில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் நான்காம் கட்ட லாக்டவுன் அறிவிப்பின் போது, தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்திருந்தது. அதன்படி அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் சுழற்சி முறையில் வாரம் 6 நாட்களும் செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அரசுப் பணிக்கு செல்லும் ஊழியர்கள், அலுவலர்களுக்காக சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. அதில் அதிகபட்சம் ஒரு பேருந்தில் 20 பேருக்கு மேல் பயணிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசின் அழைப்பை ஏற்று அரசு ஊழியர்கள் தன்னலம் கருதாது பணிக்கு நேற்று திரும்பியுள்ளனர். இதனால் வழக்கம் போல் அரசு அலுவலகங்கள் தமிழகத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன.
இதனிடையே பெரும்பாலான அரசு ஊழியர்கள் சொந்தமாக இரு சக்கர வாகனத்தில் அலுவலகங்கள் செல்கின்றனர். இதில் பெண் ஊழியர்கள் மட்டும் அரசு இயக்கும் சிறப்பு பேருந்துகள் மூலம் பணியிடங்களுக்கு சென்று வருகின்றனர். அரசு அலுவலகங்கள் தொடங்கி 2 நாட்கள் ஆகும் நிலையில், அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து அரசு கூடுதல் எண்ணிக்கையில் தங்களுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது காலை 8 மணி முதல் 10 மணி வரை பல்வேறு வழிதடங்களை ஒருங்கிணைத்து அரசு அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் மீண்டும் மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை மீண்டும் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே சமூக விலகலை கடைபிடித்து தடையின்றி பணிக்கு வந்து செல்ல முடியும் என்பது அரசு அலுவலர்களின் கோரிக்கையாக உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications