Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் உரிமைத் தொகை.. விண்ணப்பம் எல்லாம் ஓவர்.. வருது இறுதி லிஸ்ட்.. ரூ.1000 பெற தங்கமான வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகள் பட்டியலை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது. புதிதாகப் பெறப்பட்ட அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் இறுதி லிஸ்ட் வெளியிடப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

நவம்பர் 15 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. புதிய விண்ணப்பங்களைப் பதிவு செய்யவும் தேவையான ஆவணங்களைப் கொடுக்கவும் இந்த முகாம்கள் பெண்களுக்கு உதவியுள்ளன.

Tamil Nadu Government Notification magalir urimai thogai

மகளிர் உரிமை தொகை - டிசம்பர் லிஸ்ட்

பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. விரிவாக்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சரிபார்ப்புப் பணியில் வருமான விவரங்கள், முகவரிச் சான்றுகள் மற்றும் தகுதி அளவுகோல்கள் ஆகியவை கவனமாக ஆய்வு செய்யப்படும்.

புதிய பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன், டிசம்பர் 15 முதல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1000 கிடைக்கும். இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு நிதிச் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏற்கனவே மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களைச் சென்றடைந்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், ஆரம்பக் கட்டத்தில் விண்ணப்பிக்கத் தவறிய அல்லது காலக்கெடுவை இழந்த அதிகமான பெண்களைச் சென்றடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

உங்களுடன் ஸ்டாலின்

"உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களுக்குக் கிடைத்த வரவேற்பு அதிகமாக இருந்தது என்றும், பல பெண்கள் தங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவும், ஆவண உதவிகளைப் பெறவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சரிபார்ப்புப் பணி குறித்த நேரத்தில் பிழையின்றி நிறைவடைவதை உறுதி செய்ய ஒரு கண்காணிப்பு அமைப்பையும் அரசு ஏற்படுத்தியுள்ளது.

2026 தேர்தலுக்கு முன்னதாக, ஆளும் கட்சி நலத்திட்டங்களில் அதிக கவனம் செலுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தத் திட்டம் விரிவாக்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் டிசம்பர் தொடக்கத்தில் தயாராகி, புதிய பயனாளிகளுக்கு அதே மாதத்திற்குள் முதல் தவணை வழங்கப்படும் என்பதை அரசு உறுதி செய்துள்ளது.

'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்கள்

நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் கடந்த ஒரு மாதமாகப் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களும் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன.

இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் அறிந்துகொள்ளலாம்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க பெண்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பாகக் கருதப்படுகிறது. நவம்பர் 15ஆம் தேதி வரை மட்டுமே இந்த முகாம்கள் நடைபெற்ற நிலையில். இதன் பிறகு முகாம்கள் நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. புதிய விண்ணப்பங்களை ஆய்வு செய்ய வருவாய் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருவதாக துணை முதல்வர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+