தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74
சென்னை: தமிழகத்தில் டெல்லி மதமாநாட்டில் பங்கேற்ற 5 பேர் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா படுவேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 46 பேரை கொரோனா பலி கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. இதில் டெல்லி மதமாநாட்டில் பங்கேற்று திரும்பிய 5 பேரும் அடங்குவர். டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று திரும்பிய நிலையில் கொரோனா பாதிப்புடன் விழுப்புரத்தில் 3 பேரும் மதுரையில் 2 பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் திருவண்ணாமலை, சென்னை மருத்துவமனைகளில் தலா ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications