தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 4,496 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5,000 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 4,000- த்தை தாண்டியதாக உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா உறுதியானது.

TN reports single day spike of 4,496 Positives for Corona

இன்று ஒரேநாளில் 4,496 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோர் எண்ணிகை 1,51,820 ஆக உயர்ந்தது.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5,000 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,02,310 ஆகும்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1291 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 80961 ஆக அதிகரித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+