மிரட்டுறீங்களா? அப்பாவு வீசிய வெடி.. உளவுத்துறை வரை போயிருச்சாமே விஷயம்.. டெல்லியே கிளம்பி வருது போல
சென்னை: "என்னையும், 3 மாதங்களாக மிரட்டினார்கள்" என்று அமலாக்கத்துறை குறித்து சபாநாயகர் அப்பாவு பரபரப்பு கிளப்பவும், அதுகுறித்த விவகாரம் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
அரசு மருத்துவரிடமிருந்து ரூ.20 லட்சம் பெற்றது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட சம்பவமானது, தேசிய அளவில் பரபரப்பை தந்துவிட்டது.

இதனிடையே, அமலாக்கத்துறையிடம் இருந்து தனக்கு 3 மாதங்களாக மிரட்டல் வந்தது என்று சபாநாயகர் அப்பாவு சொல்லவும், அதற்கு மேல் பரபரப்பு கூடியது.
நடவடிக்கை: அப்பாவு சொல்லும்போது, "பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் தொழிலதிபர்களுக்கு குறித்து நூல் விடுவார்கள். அதாவது உங்கள் மேல் பிரச்சனை இருக்கிறது.. உங்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறார்கள். எனக்கு வேண்டிய ஆள் என்பதால் அவர்களை சமாதானப்படுத்தி வைத்துள்ளேன் என்றெல்லாம் சொல்வார்கள்..
முதலில் அன்பாக பேசுவார்கள்.. பிறகு, மிரட்டுவார்கள். பிறகு மீண்டும் சமாதானமாக பேசி பேரம் பேசுவார்கள். சமாதானத்திற்கு உடன்படியவில்லையென்றால் உடனே நோட்டீஸ் அனுப்புவார்கள்..
விசாரணை: என்னிடம் கூட சிலர் 3 மாதங்களாக பேசிக்கொண்டே வந்தனர். ஆனால் நான் காது கொடுத்து கேட்டதில்லை. விவசாயம் செய்து முன்னுக்கு வந்த என்னையே மிரட்டுறீங்களா என கேட்டேன்? என்னை ஊரை விட்டு போக சொன்னார்கள். என்னை போன்றே பலருக்கும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் இடைத்தரகர்கள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது" என்றெல்லாம் சொல்லி அதிர வைத்தார் அப்பாவு.
ஒரு மாநில சட்டமன்றத்தின் தலைவராக இருப்பவர், மத்திய அரசின் முக்கிய விசாரணை அமைப்பின் மீது கடுமையான குற்றச்சாட்டை பகிரங்கமாக சுமத்தியிருப்பதை மத்திய பாஜக அரசு, மிக எளிதாக கடந்து செல்லவில்லையாம்.. மாறாக, மிக மிக சீரியசாக இந்த குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறதாம்.
முக்கிய விசாரணை: அந்த வகையில், அப்பாவுவின் குற்றச்சாட்டு தொடர்பாக தீவிரமாக விசாரிக்குமாறு மத்திய உளவுத்துறையினருக்கு டெல்லியிலிருந்து உத்தரவும் வந்துள்ளதாம். இப்போது அவரை யார் மிரட்டியிருக்ககூடும் என்கிற விசாரணையை தமிழக அமலாக்கத்துறை தரப்பில் உளவுத்துறை விசாரிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து, அப்பாவுவிடமும் விசாரிக்கவிருக்கிறார்களாம்.

அதாவது, அமலாக்கத்துறையினர் மிரட்டினார்கள் என்று சொல்கிறீர்கள் அல்லவா ? நேரில் மிரட்டினார்களா? தொலைபேசியில் மிராட்டினார்களா? நேரில் என்றால், எங்கெங்கு வந்து உங்களை சந்தித்தார்கள் ? தொலைப்பேசி வாயிலாக எனில் எந்த எண்ணில் இருந்து மிரட்டினார்கள் ? அந்த எண்களை கொடுக்க முடியுமா? என்றெல்லாம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது மத்திய உளவுத்துறை.
தொலைபேசி: இந்த விசாரணையில், அப்பாவுவை மிரட்டியவர்கள் அமலாக்கத்துறையினரா அல்லது போலி நபர்களா ? என்கிற விபரங்களெல்லாம் தெரிந்து விடும் என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications