காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்து தேர்வு..முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வு
தமிழ்நாடு முழுவதும் இன்று 2022ம் ஆண்டிற்கான நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது.
சென்னை: காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு நேரடி எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்த தேர்வு நடைபெறுகிறது. முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.
Recommended Video
காவலர், உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான விதிகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின்படி, தமிழ் தகுதி தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு கணக்கில் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெறுகிறது. காலையில் எழுத்துத் தேர்வும் , பிற்பகலில் முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வும் நடைபெறுகிறது.
தேர்வு எழுத வருபவர்கள் 8:30 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வர வேண்டும் . தேர்வு எழுத வரும்போது பால் பாயின்ட் பென் , ஹால் டிக்கெட் , ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும்.
அதே சமயம் செல்போன், கால்குலேட்டர் ,லேப்டாப் போன்ற மின்னணு சாதன பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று காவல் துறைக்கான சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 939 தேர்வர்கள் பெண்கள் மட்டும் இன்று பங்கேற்றனர். இவர்கள் அனைவரையும் இன்று காவல்துறையினர் பலத்த பரிசோதனைக்குப் பிறகு பரிசோதனையில் செல்போன், பென்சில், போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள், எவையும் தேர்வு மையத்துக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகள் வைத்து தேர்வு மையத்திற்கு உள்ளே அனுப்பி வைத்தனர், தேர்வு மையத்தில் திருவள்ளூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி ஜோசுராஜ் தலைமையிலான 200 மேற்பட்ட போலீசார் பலத்த கட்டுப்பாடுகளுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்
தமிழகத்தில் 444 நேரடி எஸ்.ஐ., பதவிக்கான எழுத்து தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 7246 பேர் எழுதுகின்றனர்.திண்டுக்கல் செயின்ட் ஜோசப் பள்ளி, பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி, சக்தி கல்லுாரி உட்பட 8 இடங்களில் காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி, மாலை 3:00 முதல் 5:10 மணி வரை இரு பிரிவாக நடக்க உள்ளது.நாளை (ஜூன் 26) நடக்கும் தேர்வை திண்டுக்கல்லை சேர்ந்த 888 போலீசார் எழுத உள்ளனர்.தேர்வு அறை, வளாக கண்காணிப்பு பணியில் எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில், 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 8 டி.எஸ்.பி.,க்கள் உட்பட 500 பேர் ஈடுபட உள்ளனர். எழுத்துத் தேர்வை முன்னிட்டு தேர்வர்கள் கைப்பேசி கை கடிகாரம் மற்றும் பைகள் கொண்டு செல்ல தடை வீட்டில் அனைவரும் பரிசோதனைக்கு பின்னர் அவரவர் மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். தேர்வர்கள் நீண்ட வரிசையில் நின்று பரிசோதனை செய்த பின் மையங்களுக்கு சென்றனர்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications