இன்று எல்லா மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு.. சென்னையில் அதிகரிக்கும் தொற்று

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4483 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 670 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,58,272 ஆக உயர்ந்துள்ளது.

Today, 670 people have been affected by the coronavirus in Tamil Nadu

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 8,41,250
ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 12,539 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 265 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 57 பேருக்கும், கோவையில் 51 பேருக்கும், திருவள்ளூரில் 44 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எல்லா மாவட்டத்திலும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+