பயிர்க்காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்... தேவையான ஆவணங்கள் என்னென்ன? விரிவான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பயிர்க் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் விவசாயிகள் தங்கள் பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்தாண்டு மட்டும் தமிழ்நாட்டில் 34 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதற்காகப் பயிர்க் காப்பீடு செய்ய நவ. 15ஆம் தேதி தான் கடைசி நாள் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

Today is the last for insurance for crops

தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பயிர்க் காப்பீடு செய்யக் கடைசி நாள் இன்று நவ.21 வரை நீட்டிக்கப்பட்டது. பெரும்பாலான விவசாயிகள் ஏற்கனவே தங்கள் பயிர்களைக் காப்பீடு செய்து விட்டனர்..

இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகளும் உடனடியாக காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் இயற்கை பாதிப்புகள் எதாவது ஏற்பட்டால் பொருளாதார ரீதியாக அதில் இருந்து விவசாயிகளால் தப்பிக்க முடியும்.

பயிர்களைக் காப்பீடு செய்யச் சிட்டா அடங்கல், ஆதார், வங்கி தகவல்கள் தேவை என்று கூறப்பட்டு இருந்தது. பயிர்க்கடன் வாங்கியவர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தலாம்.

பயிர்க் காப்பீடு பெறாதவர்கள் பொதுச் சேவை மையங்களில் காப்பீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பயிர்க்காப்பீடு செய்ய மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு குறைவு என்பதால் உடனடியாக விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+